/* */

தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு நாள் விழா: அரியலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

HIGHLIGHTS

தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர்சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே "தமிழ்நாடு நாள்விழா" இனி கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சரல் அறிவிக்கப்பட்டது.

இதன்படி 18.07.2022 தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 06.07.2022 புதன்கிழமை அன்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டிக்கான தலைப்புகள் - தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைபோர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு

இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/–, இரண்டாம் பரிசு ரூ.7,000/– மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/– என்ற வகையில் வழங்ப்பெற உள்ளது.

போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jun 2022 2:14 PM GMT

Related News