Begin typing your search above and press return to search.
பாலியல் தொல்லை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு
உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
18 வயதுக்கு கீழே உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பள்ளிகளிலோ, வெளி வட்டாரங்களிலோ ஏற்படும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாலியல் தொல்லைகள் மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும். குற்றம் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் பற்றிய புகார்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தமிழக அரசின் உதவி மைய எண் 1098 அல்லது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு மைய எண் 100 ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு - 04329 224210 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.