/* */

தேசிய புதை உயிரிப்படிவ தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

அரியலூரில் தேசியபுதை உயிரிப்படிவ தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

தேசிய புதை உயிரிப்படிவ தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X

தேசிய புதை உயிரிப் படிவதின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் வாரணவாசி புதை உயிரிப் படிவ அருங்காட்சியக துறை சார்பில், தேசிய புதை உயிரிப் படிவ தினத்தினை முன்னிட்டு, வாரணவாசி அரசு உயர் நிலைப் பள்ளியில் அரியலூர் மாவட்ட புதை உயிரிப் படிவங்களின் முக்கியத்துவத்தினை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக "அரியலூர் மாவட்ட புதைப் படிவங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னையினை சேர்ந்த இளம் தொல் உயிரி ஆராய்ச்சியாளர் அஸ்வதா பிஜீ மாணவர்களுக்கிடையே அரியலூர் தொல் உயிர் படிவங்கள் சிறப்புகள் தொடர்பாக உரையாற்றினார்.

பின் நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதை உயிரிப் படிவ தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவர்கள் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் இளம் தொல் உயிர் ஆராய்ச்சியாளர் செல்வி.அஸ்வதா பிஜீக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் அரியலூர் புதை உயிரிப் படிவ அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவகுமார், வாரணவாசி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.சரவண ராஜா மற்றும் அறிவியல் ஆசிரியர் ம.உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 14 Oct 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி