/* */

அரியலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி வசதி துவக்கம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முழு உடல் பரிசோதனை திட்டம், குருதிவங்கி பகுப்புக்கருவியினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

அரியலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி வசதி துவக்கம்
X

அரியலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி வசதியை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் குருதி வங்கியில் புதிதாக இரத்த அணுக்கள் பகுப்புக் கருவியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (24.06.2022) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மற்றும் குருதி வங்கியில் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிதாக இரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்றைய தினம் துவக்கி வைத்தார். முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் பயனாளிக்கு பரிசோதனை அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

முழு உடல் பரிசோதனையில் அனைத்து இரத்தம், இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை தொகுப்பாக பரிசோதனை செய்யப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தால் ரூ.3750/- வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.250/- மட்டும் செலுத்தி பொதுமக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு, பயன்பெறலாம்.

குருதி வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரத்த அணுக்கள் பிரிக்கும் கருவியில் சிவப்பணுக்கள், தட்டணுக்கள் நோயாளர் தேவைக்கேற்ப வழங்க இயலும். மேலும், மேம்படுத்தப்பட்ட ECRB II ICU வார்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட ICU படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டர், வென்டிலேட்டர் ஆகியவை குறித்தும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மரு.குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், மலர்மன்னன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 Jun 2022 8:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?