/* */

அரியலூர் மாவட்டத்தில் செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவி

உலக செவித்திறன் நாளை முன்னிட்டு 5 செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவி
X
ஒரு குழந்தைக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக செவித்திறன் நாளை முன்னிட்டு 5 செவித்திறனற்ற பயனாளிகளுக்கு காதுகேட்கும் கருவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று வழங்கினார்.

முன்னதாக, உலக செவித்திறன் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நமது மாவட்டத்தில் தேசிய செவித்திறன் தின விழிப்புணர்வு பிரச்சாரமானது உலக செவித்திறன் தினம் 03.03.2020 இன்று நடைபெறவுள்ளது. காது கேளாமை பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் செவித்திறனுடைய நபர்களுக்கு பரிசோதனை செய்தும், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை அறிந்து அவர்களுக்கும் காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குறிப்பிட்ட சில தொற்றுநோய்கள், காதுகளில் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் மற்றும் அதிக ஒலியால், முதுமையால் செவித்திறன் பாதிப்படைதல் இவையாவையும் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பதன் மூலமாகவும், மருத்துவ சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம்.

சிறு வயதிலேயே இக்குறையை கண்டறிந்தும், அதற்குரிய சிகிச்சையை அளித்தல் வேண்டும். காதுகேளாமை எனும் சந்தேகம் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அதனை கண்டறியும் பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சையை பெறுதல் வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ரமேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவத்துறை மருத்துவர்கள் மரு.ராஜசேகரன், மரு.கார்த்திகேயன், மரு.இளமதி, மரு.செந்தில்குமார், குழந்தைகள் நல மருத்துவர்கள் மரு.ராதாகிருஷ்ணன், மரு.ரவிராம்குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் செவித்திறன் பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 3 March 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய