Begin typing your search above and press return to search.
குவாகம் கிராமத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம்
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை 11.05.2022 (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.