/* */

அரியலூர் கோதண்டராம சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

அரியலூர் கோதண்டராம சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் கோதண்டராம சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
X

சொர்க்க வாசலில் எழுந்தருளினார் கோதண்டராமசுவாமி.

அரியலூர் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அந்த வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெளியே வந்து கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். தொடர்ந்து, தசாவதார மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நேரத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டு, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சுவாமி வீதி உலா நடைபெறவில்லை.

Updated On: 14 Jan 2022 8:23 AM GMT

Related News