அரியலூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு -3பேர் உயிரிழந்துள்ளனர்
இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2591 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2587 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
HIGHLIGHTS
18 ம்தேதி கொரோனா நிலவரம்
அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர்உயிரிழந்துள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 113 பேர். மருத்துமனைகளில் 597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 14,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 13,257 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 882 பேர். இதுவரை 2,16,697 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 14,036 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,02,661 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9527, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,74,421 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 28,382 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,445 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 26,806 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 131 பேர்.
கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2591 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2587 பேர்போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 4 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.
நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 30 இடங்களும், நகரப்பகுதியில் 2 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 33 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.
முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!