/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3472 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2267 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,383 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 535 பேர். இதுவரை 3,11,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,723 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,95,181 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,557. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,10,381. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,371 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,851 பேர். நோய் தொற்று இல்லாதவர்கள் 38,429 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3472 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2267 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1205 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 5 Oct 2021 3:37 PM GMT

Related News