Begin typing your search above and press return to search.
செந்துறை அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
அரியலூர் மாவட்டம் செந்துறையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், அரியலூர் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் அறிவுசெல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொடையாளர்களிடமிருந்து ரத்தங்களை சேகரித்தனர்.
முகாமில் 40 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சம்சுதீன், துணைத் தலைவர் மன்சூர்அலி, மாவட்ட துணைச் செயலாளர் ஜாபர்அலி, மாவட்ட மருத்துவர் அணி ராஜ்முகமது ஆகியோர் செய்திருந்தனர்.