/* */

அரியலூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கீழ்கண்ட பதவியிடங்களுக்கு நடைபெற உள்ளது.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடத்திற்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி (வார்டு-1) உறுப்பினர் மற்றும் துளார் ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கழுவந்தோண்டி ஊராட்சி (வார்டு-6) உறுப்பினர் மற்றும் மேலணிக்குழி ஊராட்சி (வார்டு-7) உறுப்பினர், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இடையக்குறிச்சி (வார்டு-7) உறுப்பினர் மற்றும் சிலம்பூர் ஊராட்சி (வார்டு-1) உறுப்பினர், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி (வார்டு-7) உறுப்பினர் மற்றும் தென்கச்சிபெருமாள் நத்தம் (வார்டு-4) உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) 04329- 228902 எனும் தொலைபேசி எண்ணுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 Jun 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  2. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  5. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  7. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  8. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  9. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  10. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!