ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 காவல்நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த 26ம்தேதி அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர் மற்றும் மீன்சுருட்டி ஆகிய இடங்களில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து மீன்சுருட்டி மற்றும் கீழப்பழுவூர் விஏஓ.,கள் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழப்பழுவூர்,மீன்சுருட்டி ஆகிய 2 காவல் நிலையங்களிலும் ஆ.ராசா மீது இந்திய தண்டனைச்சட்டம் 153, 294(பி) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 127(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.