/* */

அரியலூர் மாவட்டத்தில் புகையிலை பொருள், மது பாட்டில் விற்ற மூவர் கைது

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் புகையிலை விற்ற 2 பேர், மது விற்ற ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் புகையிலை பொருள், மது பாட்டில் விற்ற மூவர் கைது
X

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் எஸ்.எஸ்.ஐ. அறிவழகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் செல்லகண்ணு(32),தேளூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராணி (40) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்களது பெட்டிக்கடைகளில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் சடைய படையாச்சி தெருவைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் கோவிந்தசாமி(43)என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபம் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதலாக விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து கயர்லாபாத் எஸ்.எஸ்.ஐ. அறிவழகன் வழக்கு பதிந்து கோவிந்தசாமியை கைது செய்து அவரிடம் இருந்த குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Updated On: 25 April 2022 1:46 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்