21-ம் தேதி அரியலூர் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 21ம்தேதி காலை 11மணியளவில் நடத்தப்படஉள்ளது
HIGHLIGHTS
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக வருகிற 21.06.2022 செவ்வாய்க் கிழமை காலை 11மணியளவில் "மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" மேற்பார்வை பொறியாளர், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே அது சமயம் இக்கோட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.