/* */

பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு

பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிபொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதியுற்றனர்.

அரியலூர் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் கடந்த சில தினங்களாக லேசான பனிப்பொழிவு இருந்து வந்தது. இருப்பினும் காலை 6 மணி அளவில் சூரியன் வருகையால் படிப்படியாக பனி குறைந்தது. ஆனால் இன்று சுமார் காலை 8.30 மணி வரை பனி கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கு எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு காணப்பட்டது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பனிப்பொழிவால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பறவைகளும் இதில் தப்பவில்லை. மரஉச்சியில் இருந்து தரைப்பகுதியில் உள்ள சிறுகிளைகளுக்கு இறங்கி தங்களது சிறகுகளை விரித்து வார்ம்அப் செய்து கொண்டன. மழை போல் கொட்டும் பனியில் மரக்கிளைகளில் அமர்ந்து இறக்கைகளை உலர்த்தி வருகின்றன.

Updated On: 28 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்