/* */

அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ல் கூடுகிறது: பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு..!

வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு, உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ல் கூடுகிறது: பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு..!
X

சென்னை உயர்நீதிமன்றம்.

எம்.ஜி.ஆர் துவங்கி, வலிமை மிக்க கட்சியாக விளங்கிய அ.தி.மு.க.வில், ஒற்றை தலைமை விவகாரம் தற்போது தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் கடந்த 14-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுக்குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு, உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனு தாக்கல் செய்து உள்ளார்.

பரபரப்பான சூழலில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலகலப்பும், அடிதடியும் ஏற்படலாம் என்னும் அச்சத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது, பதவி சண்டைக்காக தலைவர்கள் கட்சி நலனை மறந்து விட்டனர் என்பதையே காட்டுகிறது எனக்கூறி, உண்மை தொண்டர்கள் கண் கலங்கினர்.

Updated On: 20 Jun 2022 7:07 AM GMT

Related News