/* */

உலகின் படைகளில் இந்திய படையை அக்னிபத் நம்பர் 1 ஆக்கும்: அண்ணாமலை அதிரடி பேட்டி

உலகின் படைகளில் இந்திய படை 3 வது இடத்தில் உள்ளது; இதை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் அக்னிபத் திட்டம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

HIGHLIGHTS

உலகின் படைகளில் இந்திய படையை அக்னிபத் நம்பர் 1 ஆக்கும்: அண்ணாமலை அதிரடி பேட்டி
X

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மத்திய பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் குண்டூசி அளவுக்கு கூட மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சியில் எட்டு ஆண்டுகளில், 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திலிருந்து சொத்து பங்கீடு வரையில் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓராண்டில், 6,600 மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், முத்திரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டுள்ளது.

2014க்கு பின்னர், கொப்பரைக்கு ஆதார விலை கொண்டு வந்தது பா.ஜ., அரசு தான். கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு 150 ரூபாயாக உயர்த்தப்படும். பா.ஜ., ஆட்சியில் பொள்ளாச்சியில் தென்னை நார் வாரியம் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. 2016ல் தென்னை நார் பொருட்கள் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. தற்போது, 3,900 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதி விவசாயிகளை காக்க, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.

கொரோனா பிரச்னைக்கு பின், பா.ஜ.,க்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு துவங்கி, 800 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அறிந்து, கச்சத்தீவை மீட்போம் என, தி.மு.க., நாடகமாடுகிறது.உலகின் படைகளில், இந்தியா, 3வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபத் திட்டம். பல பாதுகாப்பு படை பிரிவுகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், கூட்டு பலாத்கார சம்பவங்கள் சாதாரணமாகி விட்டது. கருமுட்டை விற்பனை என பல புதுவித குற்றங்கள் நடக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு சலித்துவிட்டது. மத்தியில் 8 ஆண்டுகள் முடித்தும் யாருக்கும் சலிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை பேசினார்.

மேலும், அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போதும் வரும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டதாக கூறிய தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா ஆட்சியுடன் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை ஒப்பிட்டால், ஏணி வைத்தால் கூட எட்டாது எனவும் குறிப்பிட்டார்.

Updated On: 20 Jun 2022 5:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. ஈரோடு
    பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!