Begin typing your search above and press return to search.
சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42 லட்சம் பேர் பயணம்
நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
HIGHLIGHTS
இந்திய திருநாட்டின் சுதந்திர தினம் வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படகிறது. இதையொட்டி, பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சுதந்திரதினம் என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு, செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள், பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை இருந்து வெளியூர்களுக்கு 2 ,732 பஸ்கள் இயக்கப்பட்டது.இதில் திருச்சி , மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.