/* */

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட 136 அறிக்கை: உங்கள் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள்

சட்டப்பேரவையில் நேற்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 136 அறிக்கையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

HIGHLIGHTS

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட 136 அறிக்கை: உங்கள் மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள்
X

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையின் போது, நேற்று 136 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிட்டார்.அதன் விவரம் பின்வருமாறு :

1. புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் கொடுத்து 1018.85 கோடி மதிப்பீட்டில் இவ்வாறு ஜெயங்கொண்டம் டு தாம்பரம் பழனி ரயில்வே திருக்கோவிலூர் டு கரூர் ரோடு மயிலாடுதுறை வேதாரணியம் பரமக்குடி கூடலூர் திருத்தணி திருப்பத்தூர் டு காங்கேயம் குடியாத்தம் திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய பார்த்தபோது அரசு மருத்துவமனைகளில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் மற்றும் தென்காசி குழுக்களை திருச்செங்கோடு டு அம்பாசமுத்திரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய ஐந்து அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்புகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

2. புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

3. பரமக்குடி கோவில்பட்டி மணப்பாறை உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி டு மன்னார்குடி கும்பகோணம் சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய 10 இடங்களில், பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் சிக்குன்குனியா நிபா வைரஸ் காய்ச்சல் நிலையை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூ 12 கோடி மதிப்பீட்டில் புதிய RT-PCR பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.

4. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுக்கா மருத்துவமனை உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

5. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் மதிப்பு 10 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

6. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் திருநெல்வேலி மாவட்டம் கண்டிகைபேரி சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 5.85 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

7. தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்காக ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5கோடி செலவில் வழங்கப்படும்.

8. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

9. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு மருத்துவமனை ரூபாய் 2.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

10. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறு திசுக்களை சுத்திகரிக்க நவீன காமா ரூபாய் 1.90 கோடி செலவில் கட்டப்படும்.

11. சென்னை பெரியார் நகர், நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை,நீலகிரி மாவட்டம் - கோத்தகிரி,அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 ரத்த வங்கிகள் அமைக்கப்படும்.

12. சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.05 கோடி மதிப்பீட்டில் நவீன பிரேத பரிசோதனை கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்

13. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்

மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பு.

14. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 125 கோடி மதிப்பில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்

15. கோயம்புத்தூர் மதுரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு முதன்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 110 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்

16. சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை,விபத்து காய சிகிச்சை பிரிவு தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ்,ரத்த வங்கி போன்ற சேவைகளை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 71.81 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்

17. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக நவீன உபகரணங்களுடன் கூடிய நரம்பியல் பிரிவு கட்டணம் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

18. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த கேத்லேப் ( cathlab ) குருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

19. நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் ரூபாய் 8.5 கோடி செலவில் வழங்கப்படும்

20. நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் இரத்த சேமிப்பு வாகனம்,HPLC கருவி மற்றும் வேதியல் பொருட்கள் வழங்கப்படும்.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 அறிவிப்பு

21.இனி இருக்கப்போகும் நம்மைக் காக்கும் பொருட்டு தர்மபுரி திருவாரூர் தஞ்சாவூர் திருநெல்வேலி சிவகங்கை ஆகிய ஆறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் ஒட்டன்சத்திரம் சீர்காழி மேலூர் ஊத்தங்கரை ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளிலும் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவில் (critical care blocks 237.50 ரூபாய் கோடி மதிப்பில் நிறுவப்படும்

22.இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் தென் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை புதியதாக ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

23.இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

24.இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் அவசர சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கிட 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 14.70 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவிகள் வழங்கப்படும்.

25.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாயுடன் 11.62 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்

26.தென்காசி மாவட்டம் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கு கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் வாழப்பாடி சங்ககிரி பவனி வருவர் மேட்டுப்பாளையம் மற்றும் பொன்னேரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு நவீன உபகரணங்கள் ரூபாய் 2.76 கோடி செலவில் வழங்கப்படும்.

27.வேலம்பாளையம் தருமபுரி மாவட்டம் அரூர் டு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் 2.30 கோடி மதிப்பீட்டில் ct scan மற்றும் c-arm உடன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேசை வழங்கப்படும்..

28.தமிழ்நாட்டில் இடத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விபத்து மற்றும் சிகிச்சை நிலையங்களில் விபத்து பதிவுக்கான உறவுகளை பதிவேற்றம் செய்ய புதிய மென்பொருள் trauma Registry software ரூபாய் 2 கோடி செலவில் உருவாக்கப்படும்

29.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் C-arm உடன் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேசை வழங்கப்படும்.

30.வட்டார அளவிலான பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில்ல்ல்ல் புதியதாக கட்டடங்கள் ரூபாய் 143.5 கோடி மதீப்பிட்டில் கட்டபட்டு வலிமைபடுத்தப்படும்

31.ஊரகப் பகுதிகளில் ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டுவரும் 316 துணை சுகாதார நிலையங்களாக புதியதாக தரம் உயர்த்தப்படும்.

32.ஊரகப் பகுதிகளில் செயல்படும் நாற்பத்தி எட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 39.80 கோடி மதிப்பீட்டில் 15 வது நிதி குழு நிதியில் கட்டப்படும்

33.கிராமப்புற மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்

34.மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் திண்டுக்கல் கீரனூர் மற்றும் இடையகோட்டை விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் ரூபாய் 14.21 கோடி செலவில் நவீன உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்

35. 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கான புதிய குடியிருப்புகள் ரூபாய் 2 கோடி செலவில் புதியதாக தேசிய நல்வாழ்வு குடும்பத்தில் கட்டப்படும்

36.400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 4 கோடி செலவில் பசுமையான இயற்கை சுற்றுச் சூழல் நிறைந்த ஒளிர்மிகு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழகுபடுத்தப்படும்

37.புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் மற்றும் புதுநகர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் ஜமீன் கொல்லன் கொண்டான் திருவண்ணாமலை மாவட்டம் மங்களம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மற்றும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக வங்கி திட்டத்தின் கீழ் 1.20 கோடி மதிப்பீட்டில் ரத்த சேமிப்பு அலகு நிறுவப்படும்

38.பத்தமடை பிரதான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு ரூபாய் 60 லட்சம் செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்

39. திட்டப் பணிகளின் பணியாற்றும் 114 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நல அலுவலர் பணியிடங்களாக ரூபாய் 25 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்படும்.

40. தேனி மாவட்டம் இராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேர இலவச சிகிச்சை வழங்கும் பொருட்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு அமைக்கப்படும்.

41. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மேசை வழங்கப்படும்

42. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் செய்யப்படும்

43. பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பன்னாட்டு பொது சுகாதார மாநாடு நடத்தப்படும்

44. நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 30 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்

45. 16 மாவட்டங்களில் 22 அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 26.40 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்

46. தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் முதன்முறையாக அனைத்து 21 மாநகராட்சிகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 35 சுகாதார ஆய்வாளர் கட்டடங்கள் ரூபாய் 17.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

47. தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் 12 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்

48. 36 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகள் மற்றும் 26 நகர பொது சுகாதார ஆய்வகங்களுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக்காக 62 கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் ரூபாயை 7.44 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

49. தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூபாய் 4.80 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை வசதிகள் விரிவுபடுத்தப்படும்

50.தமிழ்நாட்டில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் கட்டடம் ரூபாய் 2.40 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் கட்டப்படும்.

51.24 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் மற்றும் நகர்புற சமுதாய நல மையங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எலக்ட்ரோ கார்டியோகிராபி, கார்டியோடோகோ கிராபி மற்றும் ரத்த சேமிப்பு கிடங்கு உபகரணங்கள் ரூபாயை 1.76 கோடி செலவில் வழங்கப்படும்.

52.திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

53.அரியலூர், அம்பாசமுத்திரம், பல்லடம், உள்ளிட்ட 14 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக ரூபாய் 80 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படும்.

54.நகர்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார சேவைகள் உரிய நேரத்தில் உரிய முறையில் சென்றடைய "நகர்புற சுகாதார சீரமைப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.

55.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் அனைவருக்கும் நல வாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.

56.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சேவைகளை மேம்படுத்தி அனைவருக்கும் நல வாழ்வு என்ற இலக்கினை அடைந்திடும் வகையில் ஊரக பகுதியில் உள்ள 2443 கிராம துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்கள் ஆக ரூபாய் முப்பத்தி 34.42 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும்.

57.2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு என்னும் இலக்கை அடைய அதிநவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் நுகர் பொருட்கள் ரூபாய் 48.85 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

58.2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக 33 மாவட்டங்களில் காசநோய் தீவிர கணக்கெடுப்பின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் உரிய சிகிச்சை வழங்கவும் ரூபாய் 9.41 கோடி செலவிடப்படும்.

59.தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சிடி மற்றும் எக்ஸ்ரே படங்களை ஒருங்கிணைந்து செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக காச நோய் கண்டறிய அதிநவீன புதிய சேவைகள் ரூபாய் 1.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

60.தாய் சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆர்எஸ் ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் தாய் சேய் நல ஒப்புயர்வு மையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் என்று 84.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

61. ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக பட்டுக்கோட்டை கம்பம் சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் தலா ரூபாய் 12 கோடி வீதம் ரூபாய் 36 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குழுமம் நிதியில் கட்டப்படும்

62. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய் சேய் நல பிரிவு தலா ரூபாய் 12 கோடி மதிப்பீட்டிலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ 8 கோடி செலவிலும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூபாய் 32 கோடி செலவில் நிறுவப்படும்

63. சென்னை தண்டையார்பேட்டை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம் மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூபாய் 24 கோடி செலவில் தேசிய நல்வாழ்வு குழுவில் கட்டப்படும்

64. தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு நலப் பிரிவின் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தாய் சேய் நல பிரிவுக்கான கட்டடம் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியை கட்டப்படும்

65. சிறப்பான தாய் சேய் நல சேவைகள் வழங்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மருத்துவமனைகளில் தலா ரூபாய் 6 கோடி வீதம் தாய் சேய் நல பிரிவு கட்டமைப்பு வசதிகளுடன் தாய் சேய் நல பிரிவுக்கான கட்டணம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் கட்டப்படும்

66. தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் 385 வட்டார அளவிலான சுகாதார நிலையங்கள் மற்றும் 38 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சக்சன் கேனுலா எனும் ரத்த உறிஞ்சி குழாய் உபகரணங்கள் ரூபாய் 63.45 லட்சம் செலவில் வழங்கப்படும்

67. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கும் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையம் பிரத்தியேகமாக 400 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல ஒப்புயர்வு மையமாக ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

68. தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 150 பச்சிளங்குழந்தை வென்டிலேட்டர் கருவிகள் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படும்

69. தமிழ்நாட்டில் பச்சிளங்குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கும் 146 பச்சிளங்குழந்தை நிலைப்படுத்தும் பிரிவுகளுக்கும் உயிர்காக்கும் அதி நவீன உபகரணங்கள் ரூபாய் 9.36 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

70. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 3 சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் ரூபாய் 2.26 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

71)கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் சிசு மற்றும் குழந்தைகள் நல பிரிவை மேம்படுத்த நவீன உபகரணங்கள் ரூபாய் 2.17 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

72)தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும்

73) ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோயியல் பிரிவிற்கு அதி நவீன உபகரணங்கள் ருபாய் 21.09 கோடியில் வழங்கப்படும்

74) 2030ஆம் ஆண்டிற்குள் புற்று நோய்களால் ஏற்படும் இறப்பினை தவிர்க்கவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் தற்போதைய புற்று நோய் பராமரிப்பு சேவைகளை மக்களை தேடி மருத்துவ திட்டத்துடன் ஒருங்கிணைத்து மறுசீரமைப்பதற்காக ரூபாய் 19.21 கோடி செலவிடப்படும்

75) கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்திட ரூபாய் 14 கோடி செலவில் லினாக் கருவிகள் வழங்கப்படும்

76) சென்னை அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விதமாக ஹெச். டி .பி .வி-டி.என். ஏ பரிசோதனைக்கான நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ரூபாய் 9.0 7 கோடி செலவில் நிறுவப்படும்

77) தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூபாய் 7.15 கோடி செலவில் எச்.பி.வி தடுப்பு ஊசி செலுத்தப்படும்

78) செங்கல்பட்டு நீலகிரி மயிலாடுதுறை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூபாய் 60 புள்ளி 17 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்

79) புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை பருவத்தினர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக மதுரை கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைப்பருவ புற்று நோய் பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தி சேவைகள் வழங்கப்படும்

80.இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு குருத்தணு பதிவேடு சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கிவரும் பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்

81.தமிழ் நாட்டில் முதல் முறையாக பிறவி இதய நோய் பதிவேடு உருவாக்கவும் மற்றும் இளம் சிசு பிறவி இதய நோய் கண்டறிவதை வலுப்படுத்த நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் ரூபாய் 22.43 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

82.தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் ஹெப்படைஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பரிசோதனை முகாம் ரூபாய் 10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்

83.ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி அல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சைகள் வழங்கிடவும் கூடுதலாக ஹீமோபீலியா நோய் தடுப்பு சிகிச்சைகள் ஒருங்கிணைந்த சிகிச்சை மையங்களில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

84.மரபியல் சார்ந்த நோய்கள் மற்றும் மரபு சார்ந்த அரியவகை நோய்களுக்கான மருத்துவ துறையை 3 ஒப்புயர்வு மையங்களாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மதுரை மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்திட முதற்கட்டமாக ரூபாய் 8.19 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும்

85.தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் வட்டார அளவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளர் இளம் பருவத்தினருக்கான மாதிரி சிகிச்சை மற்றும் மேலாண்மை மையங்கள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

86.சென்னை எழும்பூர் அரசு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் சிறுவர் மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கட்டமைப்பு உபகரணங்களுடன் கூடிய 5 கோடி செலவில் கருத்தரிப்பு மையங்கள் நிறுவப்படும்

87.தமிழ்நாட்டில் முதன்முறையாக 420 வட்டார அளவிலான பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்

88.கோயம்புத்தூர் மதுரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

89.கோயம்புத்தூர் சேலம் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் ரூபாய் 1.92 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

90.கருவுற்ற தாய்மார்கள் இடையே ஹீமோகுளோபினோபதீஸ் கோளாறுகளை கண்டறிந்து மரபணு ஆலோசனை வழங்கும் திட்டம் மேலும் 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரங்களில் ரூபாய் 1.68 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்

91.தமிழ்நாட்டில் முதன்முறையாக மாதிரி அடிப்படையில் நீரிழிவு நோய் மற்றும் குருதி நல பாதிப்புகளால் ஏற்படும் கால் பாத பாதிப்பை கண்டறிந்து ஆரம்ப நிலை சிகிச்சையின் மூலம் கால் இறப்புகளை குறைக்க திட்டம் ரூபாய் 1.05 கோடி செலவில் செயல்படுத்தப்படும்

92.திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சேவைகள் மேலும் மேம்படுத்தினார் திருநெல்வேலி வேலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் ஆலோசனைப் பிரிவு ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்திவிடும்

93.பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கால இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவத் துறை மற்றும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை யுடன் இணைந்து இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்கும் மற்றும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இதய மருத்துவ குழுவினர் சிறப்பு பயிற்சி அளிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும்.

94.சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் உள்ள தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவில் மனிதவளம் வலுப்படுத்தப்படும்

95.ஹீமோபீலியா தொடர் சிகிச்சை தினம் பராமரிப்பு சேவை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரிவுபடுத்தப்படும்

96.நவீன அல்ட்ரா சவுண்ட் கருவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 63.07 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

97.நாள்பட்ட சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகளில் நலனுக்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிறுநீரக பராமரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் 100 புதிய ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்கான நவீன உபகரணங்கள் ரூபாய் 23.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

98.தமிழ்நாட்டில் 30 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சையை மேம்படுத்த நவீன உபகரணங்கள் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

99.தமிழ்நாட்டு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் 13 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படும் இருதய பிரிவினை மேம்படுத்தும் விதமாக மிட் ரேஞ்ச் எக்கோ கருவி ரூபாய் 5.20 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

100.தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் 15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படும் கேத் லேப் பிரிவை மேம்படுத்த பவர் இன் செக்டர் என்னும் நவீன உபகரணங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

101. தமிழ்நாட்டில் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோய் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் ரத்த அழுத்தத்தை கண்டறிய நவீன ரத்த அழுத்த கண்டறியும் கருவி ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

102. தமிழ்நாட்டிலுள்ள சென்னை ஸ்டான்லி கீழ்பாக்கம் கோயம்புத்தூர் மதுரை விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலி மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் உடல் பாதிப்புக்கள் மற்றும் இழப்புகளை குறைக்கும் நோக்கில் அதிநவீன ரத்த சுத்திகரிப்பு உபகரணம் ரூபாய் 1.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

103. காது-மூக்கு-தொண்டை சிகிச்சைக்கான நவீன உயர் தொழில் நுட்ப உள்நோக்கு அறுவைச் சிகிச்சை கருவிகள் 7 அரசு மருத்துவமனைகளுக்கும் செவித் திறன் கண்டறியும் நவீன உபகரணங்கள் 9 மாவட்ட மருத்துவ மனைகளுக்கும் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

104. திருவண்ணாமலை மற்றும் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் லாப்ராஸ்கோப்பி கருவிகள் வழங்கப்படும்

105. தகவல் மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக 15707 சுகாதார நிலையங்களில் கம்பியில்லா இணைய சேவை ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்

106. மக்கள் நல பதிவேட்டில் விஷ்ணு மயம் ஆக்கும் பொருட்டு 20 ஆயிரம் இணையவழி வசதியுடன் கூடிய மின்னணு தொலைத்தொடர்பு கருவிகள் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சுகாதார பெண் தன்னார்வலர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

107. உலக வங்கித் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட இறகுகளின் படி தாய் சேய் நல என்ன மேடம் பணிகளில் புள்ளிவிவரங்களை பகுதி சுகாதார செவிலியர்கள் மூலம் உடனுக்குடன் இணையவழியில் பதிவு செய்வதற்கு ரூபாய் 19.86 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி திட்டத்தின் கீழ் 1806 ஊரக சுகாதார நிலையங்களுக்கு தலா ஒரு மடிக்கணினி வழங்கப்படும்

108. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் மின்னும் சுகாதார இயக்குனரகம் ஒரு ஐந்து கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

109. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார விவரக்குறிப்பு மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 3 கோடி செலவிடப்படும்

110. குருதி தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் குருதி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு தொடர் தன்னார்வ குருதி கொடையாளர்கள் விவரங்களை பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

111. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொலை மருத்துவ சேவை தொடங்கப்படும்

112. நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி மனநலம் காப்பதற்கான மாநில அளவிலான ஒப்புயர்வு மையமாக வைத்து மனநல மருத்துவமனையில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்

113. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கோயம்புத்தூர் கன்னியாகுமரி சேலம் மாவட்டங்களில் அவசர சிகிச்சை மீட்பு மையங்கள் ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்

114. அதிகரித்துவரும் தற்கொலை மரணங்கள் குறைக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உயிர் கொல்லியான எலிக்கொல்லி பசை விற்பனை தடை செய்ய சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்

115) தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தூய்மையை காக்கும் பொருட்டு நாம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தை தொடர்ந்து செயலாற்றிட ரூபாய் 32.77 கோடி செலவிடப்படும்

116) செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, மற்றும் தென்காசி, மாவட்டங்களில் 5 புதிய மாவட்ட மருந்து கிடங்குகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்

117) குழந்தைகள் மற்றும் இளம் சிசு சிகிச்சை மையங்கள் மற்றும் தரச் சான்றிதழ் பெற 40 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 3.39 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்

118) மாநில தலைமை இட நவீன தடுப்பூசி சேமிப்பு கிடங்கின் கூடுதல் கட்டடம் செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் ரூபாய் 66.87 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் கட்டப்படும்

119) அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவமனை வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்படுவர்

120) 1021 உதவி மருத்துவர்கள் 3287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் உள்ளிட்ட 4308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள்

121. 10 அரசு மருத்துவமனைகளிலும் திறன் மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவ கண்காணிப்பாளர் கீழ் மருத்துவமனை மேலாண்மை அலுவலர் உலக வங்கி திட்டத்தின் கீழ் நியமிக்கப்படுவர்

122. தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து மருத்துவம் மற்றும் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வழி முறைகளை ஒருங்கிணைத்து பலதரப்பட்ட விழிப்புணர்வு உத்திகளை பயன்படுத்தி பொதுமக்களிடையே தகவல் கல்வி துபாய் அரசின் தொழில் தொடர்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 15 கோடி செலவிடப்படும்

123. அனைவருக்கும் நல வாழ்வு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் மதுரை திருவண்ணாமலை திருநெல்வேலி தூத்துக்குடி தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பள்ளி சுகாதார தூதுவர்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் ரூபாய் 6.47 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

124. தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் செயல்படும் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 6000 கல்வி நிறுவனங்களில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரூபாய் 2.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்

125. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

126. உணவுப்பொருள்களில் பாக்கெட்டுகளின் உள்ள முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

127. வேளாண் துறையினருடன் இணைந்து ஆர்கானிக் உணவுப் பொருட்களின் உற்பத்தி முறைகள் பரிசோதனை முறைகள் மற்றும் விற்பனை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

128. நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பெருந்திட்ட வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை ஏற்படுத்தப்படும்

129. டாம்ப்கால் நிறுவனத்தின் முதல் உற்பத்தி அழகில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்

130. பதிவுபெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வு ஊதியம் ரூபாய் 1000 லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தப்படும்

131. மூலிகை பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்

132. இலஞ்சி மன்றம் என்று இளஞ்சிறார் மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு மூலிகைகள் மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

133. திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பயிர் சாகுபடி மேற் கொள்ளப்படும்

134. ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் ஏழு சித்த ஆய்வு நல மையங்கள் மற்றும் ஒரு தேசிய ஊரக நலத்திட்ட சித்த பிரிவு ஆகியவற்றை 8 இடங்களை மாற்றி நிறுவப்படும்

135. டாம்ப்கால் நிறுவனத்தின் வாயிலாக புதிதாக அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்யப்படும்

136. தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்திய மருத்துவ முறை மருந்துகளின் தரத்தினை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் செயல்படுத்தப்படும்

Updated On: 30 April 2022 5:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை