/* */

சுருண்டது தென் ஆப்பிரிக்கா.. தொடரை கைப்பற்றியது இந்திய அணி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

HIGHLIGHTS

சுருண்டது தென் ஆப்பிரிக்கா.. தொடரை கைப்பற்றியது இந்திய அணி
X

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனிடையே தொடரை கைப்பற்றும் அணியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான் (15) , ஹென்ரிக்ஸ் (3) , மார்க்ரம் (9 ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ர். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் க்ளாஸென் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக குல்தீப் யாதவின் மாயாஜால சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணியில் க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 20.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து தொடரை கைப்பற்றியுள்ளது. அணியின் கேப்டன் ஷிகர் தவான் 14 பந்துகளில் 8 ரன்களுடனும், சுப்மன் கில் 57 பந்துகளில் 49 ரன்களுடனும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 10 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் 2 ரன்களும் எடுத்து மொத்தம் 105 ரன்களுடன் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

இதன் மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு 13 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் தென்னாப்பிரிக்கா, 13 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 11வது இடத்தில் பின்தங்கியது. இதனால் உலகக்கோப்பை போட்டிகளில் நேரடியாக நுழையும் வாய்ப்பை இழந்தது.

இனி உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாடி முதல் இரண்டு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே தென்ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடியும்.

Updated On: 14 Oct 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !