All-time top scorer for Portugal in tamil -'அம்மாவுக்கு ஏன் வீடு கட்டி கொடுக்கலை..?' ரொனால்டோவின் பதில் என்ன..? படீங்க ..!
All-time top scorer for Portugal in tamil -போர்ச்சுகலின் ஆல் டைம் டாப் ஸ்கோரர் என்று போற்றப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் இங்கே தரப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கால்பந்து வரலாற்றில் தனக்கென உலக அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சிறந்த வீரர் என்பதை பல நேரங்களில் உணர்த்தியுள்ளார். அப்படியான ஒரு சம்பவத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது போர்த்துகீசிய கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஒரு பத்திரிகையாளர், ' உங்கள் அம்மா ஏன் இன்னும் உங்களுடனேயே வாழ்கிறார்? அவருக்கு நீங்கள் ஏன் ஒரு வீட்டைக் கட்டிக்கொடுக்கவில்லை?' என்று கேட்டார்.
அதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, ' என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார். எனக்காக அவரது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பல நாட்கள் நான் சாப்பிடவேண்டும் என்பதற்காக அவர் எனக்காக பசியுடன் தூங்கச் சென்றிருக்கிறார்.
All-time top scorer for Portugal in tamil
அப்போது வறுமைமிகுந்த வாழ்க்கை. எங்களிடம் பணமே இல்லை. நான் கால்பந்து விளையாடுவதற்காக எனது முதல் காலணியை வாங்குவதற்கு அவர் வாரத்தில் 7 நாட்களும் இரவும் பகலும் பணிப்பெண்ணாக வேலை செய்திருக்கிறார். அப்படி அவர் உழைத்ததால்தான் இன்று ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக உங்கள் முன்னாள் நிற்கிறேன்.
நான் பெற்ற எனது வெற்றிகள் அனைத்தும் அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. என் அம்மா உயிருடன் இருக்கும்வரை அவர் எப்போதும் என் கூடவே, என் பக்கத்திலேயே இருப்பார். இப்போது நான் கொடுக்கக்கூடிய அனைத்தும் என்னிடம் இருந்தாலும், என் அம்மா என்பவர் மட்டுமே எனக்கானவர்.
என் அம்மாவே என் அடைக்கலம். அதுமட்டுமல்ல என் அம்மா எனக்குக்கிடைத்த மிகப்பெரிய பரிசு.' என்றார்.
வசதிகள் வந்துவிட்டால் பெற்றோரைத் தூக்கி எறியும் இந்த காலத்தில், உலகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரர் தனது தாய் தன்னை உருவாக்கியதை மறக்காமல், வறுமையுற்ற காலத்தை எண்ணி, தாயை தன்னுடனேயே வைத்திருப்பது,அவர் ஒரு சாதாரண விளையாட்டு வீரர் அல்ல, அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர் என்பதை நிரூபிக்கிறது.
All-time top scorer for Portugal in tamil
தற்போது 38 வயதான ரொனால்டோ, அவரது 7வது வயதில் அண்டோரின்ஹா எஃப்சி அணியுடன் கால்பந்து விளையாடத் தொடங்கினார். 15 வயதில், இதய நோய் தாக்கி கால்பந்தை தொடவே முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கால்பந்து விளையாடத் தொடங்கினார். அதன்பிறகு இன்றுவரை அவரது கால்கள் ஓயவில்லை.
ரொனால்டோ 59 ஆட்டங்களில் 69 கோல்களை அடித்தார். இது 2013 ம் ஆண்டின் இறுதியில் அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும். அதே சீசனில் அவர் தனது முதல் FIFA Ballon d'Or விருதை வென்றார்.
2015-16 சீசனில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் 11 வது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல உதவினார். பின்னர் லீக் மற்றும் அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண் பெற்றவர் ஆனார்.
All-time top scorer for Portugal in tamil
2018 ஆம் ஆண்டில், ரொனால்டோ ரியல் மாட்ரிட்டை விட்டு வெளியேறி இத்தாலிய கிளப் ஜுவென்டஸில் சேர்ந்தார். அங்கு அவர் 4 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், நான்கு வருட ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளில் முடிவடைந்தது. ஆகஸ்ட் 2021 இல் ரொனால்டோவை மீண்டும் ஒப்பந்தம் செய்வதாக மான்செஸ்டர் யுனைடெட் அறிவித்தது.
இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கால்பந்து வரலாற்றில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.