/* */

செல்வம் பெருக வழிமுறைகள்... உங்களுக்குத் தெரியுமா

இறைவனை நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார், கடவுள் தன்னை வணங்குபவருக்கு மட்டுமே உதவி செய்வார்

HIGHLIGHTS

செல்வம் பெருக வழிமுறைகள்... உங்களுக்குத் தெரியுமா
X

பைல் படம்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் எனும் பழமொழியின் பொருள் என்ன? நாம் என்றும் இறைவனை வழிபட வேண்டும். இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார். கடவுள் தன்னை வணங்குபவருக்கு மட்டுமே உதவி செய்வார்.

நம்பிக்கையோடு பிரார்த்தித்தால், விதியின் வேகம் குறைந்துவிட்டதாக உனக்கே தோன்றுகிறது. விரோதித்து நின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது. கடவுளை நம்வினோர் கைவிடப்படார் என்று, ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள். இன்பமும், நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன. துன்பங்களை களைவதற்கு நம்பிக்கையே முக்கியம். ஏதோ கஷ்டம் வந்துவிட்டது. கோவிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை. நம் அறிவானது ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும். அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை. இந்த தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்று லயத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்க வேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள். பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

சாப்பிடும் போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல். இரவில் தயிர் சேர்த்துகொள்ளக் கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்ஷம் காணாமல் போய்விடும்.பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்து விட்டு ராஜா கைவைத்து இருப்பது போல் வைக்கவேண்டும்.

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.படத்திற்கும் கல்லாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.

லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல "ஓம் ஐஸ்வரேஸ் வராய நம " என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டக்கூடாது.இது எதுவுமே செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது...ஓம் அகத்தீசாய நம!

ஓம் கரூவூர்தேவாய நம! ஓம் போகதேவாய நம! ஓம் கோரக்கதேவாய நம! என்ற சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.

Updated On: 26 Oct 2022 4:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...