/* */

அடேங்கப்பா... ஆடி மாதத்தில், இவ்வளவு சிறப்பு அம்சங்களா?

இன்னும் பத்து தினங்களில், ஆனி மாதம் முடிவடைந்து ஆடி மாதம் துவங்க இருக்கிறது. ஆடி மாதத்தில், நிறைந்திருக்கும் அற்புத விஷயங்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

HIGHLIGHTS

அடேங்கப்பா... ஆடி மாதத்தில், இவ்வளவு சிறப்பு அம்சங்களா?
X

அம்மனின் அருளை அள்ளித் தரும் ஆடி மாதம்  சிறப்புகளை அறிவோம். (கோப்பு படம்)

சித்தர்களால் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையில் உத்தராயனப் புண்ணிய காலம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையில் தட்சிணாயனம் புண்ணிய காலம் என்றும் வகுக்கப்பட்டது.

தட்சிணாயனம் ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் ஆகும் இந்த மாதத்தில் சூரியனிடம் இருந்து சூட்சும சக்திகள் அதிகமாக வெளிப்படும் பிராண வாயு பூமிக்கு அதிகமாகக் கிடைக்கும்; உயிர்களுக்கு முக்கிய தேவையான ஆதாரசக்தியை அதிகமாக தந்து நம்மை காக்கும் மாதம் ஆகும். அதனால் அந்த சூரிய உதயத்தில் நாம் இந்த கதிர் வீச்சுகளை நமக்கு நமது உடலில் எடுத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்தனர். அப்படி செல்வதன் மூலம் அதன் கதிர்கள் நம்மில் சென்று நம்மை தூய்மைபடுத்தும் நமது கெட்ட சக்திகளை அழிக்கும்.


ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர். சர்வேஸ்வரனை பாம்பாக மாறி கைலாயத்தில் நுழைந்து உமையவள் வேடம் தரித்து சிவனை அடைய முனைந்தபோது அவளின் கசப்பு உணர்வை உணர்ந்த இறைவன் ஆடியை சூலாயுதத்தால் அழிக்க முற்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட தீ பிழம்பு ஆடியை புனிதம் அடைய வைத்தது. சிவன் அவருக்கு ஒரு சாபம் கொடுத்து, வரம் ஒன்று கொடுத்தார்.

கசப்பான மரமாக பூலோகத்தில் அவதரிக்கவும் அம்மரத்தில் ஆதிபராசக்தி வசம் செய்வார் என்றும், ஆடி வெப்பம் மரமாக மாறி அம்மரத்தை அம்மனின் அம்சம் கொண்டு வழிபடுவர். அனைவருக்கும் நாக தோஷம் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாவ வினைகள் தீர்க்க அருள் புரிய வரம் தந்தார்.

இவ்வாறு மக்கள் இந்த காலத்தில் அம்மன் வழிபாடு செய்ய சித்தர் பெருமக்கள் வழிவகுத்தனர் என்கிறது சாஸ்திரங்கள்.


அம்மை போன்ற நோய்க்கு வேப்ப மரம் மருந்தாக நம்மில் இருந்து காப்பது அனைவரும் அறிந்த உண்மை ஆனால் இன்று அதை மருந்தாக்கி கொண்டு மாத்திரைகளாக தருவதால் நாம் அதற்க்கு மதிப்பு தருவதில்லை. ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் அனைவராலும் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபடுவது மிக நல்லது ஆடிக் கிருத்திகை முருகப்பெருமானுக்குரிய திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது அதே போல ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலையில் பிதுர் பூஜைகளுக்கான பூஜை செய்வது அவசியம் என்று ஆன்மீக நூல்கள் நமக்கு எடுத்துரைகிறது.


ஆடி மாத ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் அரசமரத்தைச் சுற்றி வலம் வந்து நாம் வழிபாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் ஆண்களுக்கு சுக்ல விருத்தி ஏற்ப்படும். ஆடி மாதப் பௌர்ணமியை வியாச பூஜை என்று சிறப்பிக்கபடுகிறது அந்நாளில் நமக்கு கல்வி சொல்லி தந்த ஆசானை நினைத்து வழிபட்டால் கல்வி மற்றும் பதவிகளில் சிறந்து நம் வாழ்வில் நிலை கொள்ள முடியும் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் கருடன் பகவான் அதனால் அந்த நன்னாளில் சுவாதி நட்சத்திர நாளில் வானில் பறக்கும் கருடனை தரிசிப்பது மிக நல்லது.

ஆடி மாதத்தில் நடைபெறும் தெய்வ வழிபாடுகள் மற்றும் விழாக்களில் கலந்து கொண்டு வாழ்வில் வசந்தம் மற்றும் இன்பம் நிலைத்து இறைநிலையில் கலப்போம்.

Updated On: 5 July 2023 8:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  2. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  3. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  6. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  7. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  9. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  10. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?