கடன்களால் அதிக தொல்லையா?.... சிறுவாபுரி முருகனை வணங்குங்க....தீர்வு கிட்டும்...
siruvapuri balasubramaniya swami temple சென்னையில் இருந்து 33 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி. இக்கோயிலில் உள்ள மூலவர் பாலசுப்ரமணியரிடம் பக்தர்கள் வேண்டுவது அனைத்தும் கிட்டும் என்பது ஐதீகம். வேண்டிக்கோங்க...
HIGHLIGHTS
siruvapuri balasubramaniyar swamy temple
ஆன்மீகம் என்பது அவரவர்களின் நம்பிக்கைக்குரியது. அந்த வகையில் ஒருசிலர் தினமும் கோயிலுக்குச்சென்று கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.ஒரு சிலர் வாரத்தில் மூன்று முறை செல்வார்கள். மற்றவர்களோ வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் மாலை நேரத்தில் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதுபோல் அவரவர்களின் நேரத்திற்கு தகுந்தாற்போல் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு வாரந்தோறும் எல்லாநாட்களுமே கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் விசேஷ நாட்களில் மட்டுந்தான் கோயிலுக்கு செல்கின்றனர். இதுபோல் அவரவர்களின் மனநிலையைப் பொறுத்து ஆன்மீகச் செயல்களில் ஈடுபாடு உள்ளவர்களாக உள்ளனர்.
siruvapuri balasubramaniyar swamy temple
சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் ஸ்வாமி வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில். (கோப்பு படம்)
siruvapuri balasubramaniyar swamy temple
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்கும் ஆசைகள் என்பது உண்டு. அதில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை... இந்த மூன்று ஆசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. அந்த வகையில் பெண்ணாசைக்குத்தான் திருமணம் நடந்து விடுகிறது.வாழ்க்கை துவங்கிவிடுகிறது. மண்ணாசை என்பது அனைவருக்குமே உண்டு. தாம் வாழும் வீடு சொந்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு எளிதில் கிட்டி விடாது. ஜாதக ரீதியாக அந்த பலன்கள் சரியாக அமையும்போதுதான் நம்மால் சொந்தமாக நிலத்தை வீட்டை வாங்க முடியும் . அவரவர்களின் ஜாதக கோசார பலன்கள் படிதான் அனைத்துமே நடக்கும்.அடுத்து பொன்னாசை கையில் காசு இருந்தால் நினைக்கும்போது வாங்கிக்கொள்ளலாம்.
இதற்காக நாம் பணத்தினை எவ்வளவு சேர்த்து வைத்தாலும் அந்த நேரம் வரும்போதுதான் எல்லாமே ஒர்க் அவுட் ஆகும். அந்த வகையில் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரனோடு தொடர்பு பெற்றுவிட்டாலே சொந்தவீடு அமைந்துவிடும்.
வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு பழமொழி உண்டு. வீடு கட்டுவது என்பது நம் ஒவ்வொருவரின் நிரந்தர கனவாக இருந்தாலும் நேரம் வரும் போதுதான் எல்லாமே அமையும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மனைவியும் வீடும் அமைவது எல்லாம் அவரவர்கள் கொடுத்து வைக்க வேண்டும். மனைவி அமைந்தாலும் ஒரு சிலருக்கு வீடு அமைவது இல்லை.
siruvapuri balasubramaniyar swamy temple
சிறுவாபுரி முருகன் பச்சை மரகதக்கல்லில் காட்சியளிக்கிறார் (கோப்பு படம்)
siruvapuri balasubramaniyar swamy temple
ஜோதிட ரீதியாக யாருக்கு சொந்த வீடு அமைகிறது என்று பார்த்தால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-ம் ஸ்தானம் யாருக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறதோ, அவர்களுக்கு எதிர்பாராமல் சொந்த வீடு மனை யோகம் அமைகிறது.ஒரு சிலருக்கு எந்த வசதி வாய்ப்பும்இருக்காது. ஆனால் அவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் இருக்கும். இதனால் எப்படியாவது பணத்தினைப் புரட்டி கடன் வாங்கியாவது சொந்த வீட்டில் அமர்ந்துவிடுவார்கள்.
கோடீஸ்வரனாக இருப்பவர்கள் சொந்த வீடு வாங்க முடியாமல் திணறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களிடம் வேலை செய்பவர் சொந்த வீடு வாங்கியிருப்பார். இதுபோல் வாங்கியவர்களைக் கேட்டால்தான் அவர்கள் பட்ட கஷ்டம் எப்படின்னு தெரியவரும். வீடு அமைவது சாதாரண விஷயம் இல்லை.
எவ்வளவுதான் சம்பாத்தியத்தில் வீடு வாங்கினாலும் அல்லது சொத்து பங்கில் வந்தாலும் அவர்களுக்கு சொந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம்இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் என்ன காசு இருந்து என்ன பயன்? சொல்லுங்க... எத்தனையோ பேர்கள் சொந்த வீடு வைத்திருந்தும் வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகின்றனர். அப்படியே குடி போனாலும் கடன் பிரச்னைகளால் அந்த வீட்டினையே விற்று கடன் கட்டும் நிலைமைக்கு தள்ளப்படுவோரும் இந்த லிஸ்டில் உண்டு. பூர்வீக சொத்து இருந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு வாய்ப்பதில்லை.காரணம் கோர்ட்டில் கேஸ் நடப்பதால் யாரும் பயன்படுத்த முடியாத நிலையாக பூட்டிக் கிடக்கும்.
உங்களுக்கு ஜாதக அமைப்பு இருந்தும் சொந்தவீடு ஆசை நிறைவேறவில்லையா? அப்படி என்றால் சிறுவாபுரி முருகனை வணங்குங்கள்...விமோசனம் கிடைக்கும்..
தமிழகத்தில் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னம்பேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியர் கோயில் . சென்னைக்கு வடமேற்கே சென்னை- கொல்கத்தா ஹைவேஸ் ரோட்டில் சென்னையிலிருந்து 33 கி.மீ்.தொலைவில் வயல்கள் சூழ்ந்த பகுதியில் 3 கி.மீ. சென்றால் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும், செல்லலாம். குசலபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, சிறுவாபுரி என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுவதும் உண்டு.
siruvapuri balasubramaniyar swamy temple
siruvapuri balasubramaniyar swamy temple
தல வரலாறு
அஸ்வமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமன் இதற்காக யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட்டார். அந்த குதிரை வால்மீகி ஆஸ்ரமத்தின் அருகில் வந்தபோது ராமனின் பிள்ளைகளான லவனும், குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இதனையறிந்த லட்சுமணன் குதிரையை மீட்டுப்போக வந்தான். இருந்தாலும் சிறுவர்களை அவனால் வெல்ல முடியவில்லை. கடைசியில் ராமனே வந்து சிறுவர்களிடம் போர் புரிய நேர்ந்தது. சிறுவர்களான லவனும்,குசனும் அம்பு விட்ட இடம்தான்இன்று சிறுவாபுரி என்றழைக்கப்படுகிறத.
ஸ்தல சிறப்புகள்: சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும் பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனைத் தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார். வாஸ்து அதிபதியான பிரம்மாவைத் தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை!
திருமணத்தடை நீங்க
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம். இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.
siruvapuri balasubramaniyar swamy temple
siruvapuri balasubramaniyar swamy temple
மரகதப்பச்சை மயில்
கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
வீடு, கடன் பிரச்னை நீங்க...
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது நிதர்சன உண்மையாகும். தை மாதத்தில் கிரஹப்பிரவேசத்திற்க்கு நாள் குறித்துவிட்டு நம்பிக்கையுடன் சிறுவாபுரி செல்லுங்கள். சொந்த வீட்டில் குடியேறுவது நிச்சயம்!