/* */

sai baba quotes in tamil-சீரடி சாய்பாபா மகிமை அறிவோம் வாருங்கள்..! அவர் கூறிய நற்கருத்துகள்..!

sai baba quotes in tamil-பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய சாய் பாபா, இந்து முஸ்லீம்களிடையே நேசத்தை வளர்த்தவர். இந்துக்கள் மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் கோவில்களிலும் வழிபடும் இணக்கமான சூழலை வளர்த்தவர்.

HIGHLIGHTS

sai baba quotes in tamil-சீரடி சாய்பாபா மகிமை அறிவோம் வாருங்கள்..! அவர் கூறிய நற்கருத்துகள்..!
X

sai baba quotes in tamil-சாய்பாபா மேற்கோள்கள்.(கோப்பு படம் )

sai baba quotes in tamil-சாய் பாபா,மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்த ஆன்மீக குரு ஆவார். அவர் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் போற்றப்படும் புனிதத் துறவியாக விளங்கினார். சாய் பாபா, தீவிர சிவ பக்தர்களான தாய்,தந்தையருக்கு பிறந்திருந்தாலும், இவர் முஸ்லிம் பக்கீர் ஒருவராலேயே வளர்க்கப்பட்டார். அதனாலேயே இரு மதத்தாரும் இவரைப் போற்றி வணங்குகின்றனர்.


சாய் பாபா, தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் பல்வேறு செயல்கள் மூலம் இந்து மற்றும் முஸ்லிம் மத இணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இவர் சமாதி அடைந்த இடமான சீரடி தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள், நாள்தோறும் வந்து தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. அவர் போதித்த அல்லது அவர் கூறிய நற்கருத்துக்கள் மேற்கோள்களாக உங்களுக்கு தரப்பட்டுள்ளன.

ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்..!

உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்..!

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது..!

நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!

sai baba quotes in tamil

என் வார்த்தைகளில் நம்பிக்கை வை. எதை நீ தேடினாயோ அது உன்னைத் தேடி வரும்..!

நீ செல்லும் இடமெல்லாம் சாய் துணையாக இருக்கிறேன் நல்லதே நடக்கும்..!

அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கமே சிறந்தது..!

சங்கடங்களை நினைத்து சந்தோஷத்தை தொலைக்காதே. அனுதினமும் வணங்கும் கடவுள் நான் இருக்கிறேன். அனைத்திலும் இருந்து நான் உன்னை காப்பேன்..!

உன் நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உன்னை ஒருபோதும் கைவிடாது உன்னுடன் இருந்து வாழ வைக்கும்..!


sai baba quotes in tamil

மனிதர்கள் உன்னை தனித்து விடும் போது உடைந்த போகாதே. நீ நினைக்காதே இடத்திலிருந்து நான் உனக்கு உதவிகளை கொண்டு வருவேன்..!

வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை பலமாக பயன்படுத்திக் கொள்வது நமது பொறுப்பாகும்..!

பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம்.பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்..!

இறைவன் சிலவற்றை காலம் கடந்து கொடுத்தாலும் காலத்தால் அழிக்க முடியாததாக கொடுப்பார்..! சோர்ந்து போகாதீர்கள்..!

உனது வெற்றியை தேடுவதை விட மகிழ்ச்சியை வாழ்வில் தேடிப்பார் வெற்றி உன்னை தேடி வரும்..!

sai baba quotes in tamil

நான் உன்னைப் பாதுகாப்பேன். உன் மீது அன்பாக இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. உன்னை எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்..!

கடவுள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து உங்களை ஒன்றுமில்லாதவராக்கினால், வருத்தப்படாதீர்கள், ஏனெனில் கடவுள் உங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கப் போகிறார். மேலும் அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தொடங்குவார்..!

உங்கள் வாழ்க்கையில் பல வருடங்களாக இருந்த இருள் இப்போது மறைந்துவிடும்.

எல்லாச் செயல்களையும் இறைவனின் செயல்களாகப் பார்த்தால், நாம் பற்றற்றவர்களாகவும், கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்போம்..!


sai baba quotes in tamil

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை..!

ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள்..!

அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்..!

அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும்..!

எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது..!

sai baba quotes in tamil

தன்னலமற்ற சேவை மட்டுமே ஒருவரின் இதயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதநேயத்தை எழுப்புவதற்கு தேவையான வலிமையையும் தைரியத்தையும் தருகிறது.

நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம்.

தான் பிறந்த சேறு அல்லது தன்னைத் தாங்கும் நீரால் கூட பாதிக்கப்படாமல், சூரியன் வானத்தில் உதிக்கும்போது, தன் இதழ்களை விரிக்கும், தாமரையாக நீங்கள் இருக்க வேண்டும்..!

எல்லாச் செயல்களும் எண்ணத்தின் விளைவுகளே, எனவே எண்ணங்களே முக்கியமானது..!


sai baba quotes in tamil

இந்தப் பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம்..!

பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை..!

தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்..!

உண்மையான அழகு உண்மையான கல்வியில் உள்ளது..!

வாழ்க்கை என்பது ஒரு பாடல் - அதைப் பாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - அதை விளையாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சவால் - அதை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு கனவு - அதை உணருங்கள். வாழ்க்கை என்பது ஒரு தியாகம் - அதை வழங்குங்கள். வாழ்க்கை என்பது ஒரு காதல் - அதை அனுபவியுங்கள்..!

sai baba quotes in tamil

நீங்கள் என் உதவியையும் வழிகாட்டுதலையும் நாடினால், நான் உடனடியாக அதை உங்களுக்குத் தருவேன்..!

இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார்..!

இந்த உலகில் புதியது எது? எதுவும் இல்லை. இந்த உலகில் பழையது எது? எதுவும் இல்லை. எல்லாம் எப்பொழுதும் இருந்தது மேலும் எப்போதும் இருக்கும்..!


sai baba quotes in tamil

நமது கர்மாவே நமது இன்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணம், அதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்..!

இறைவனுடன் முழுமையான இணக்கத்துடன் வாழக் கற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் எதிர்கால வாழ்வு மகிமையடையும்..!

நீங்கள் உங்கள் அகக் கண்ணால் பார்க்கும்போது. நீங்கள் தான் கடவுள் என்றும் நீங்கள் அவரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் உணருவீர்கள்..!

நம் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் உருகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டி போன்றது. அது முழுமையாக உருகும் முன், அதை மற்றவர்களுக்கான சேவைக்கு அர்ப்பணியுங்கள்..!

Updated On: 6 Dec 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  6. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  7. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  8. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...