/* */

சோபகிருது வருட 12 ராசிகளுக்கான பலன்கள்

சோபகிருது வருடத்தில் மனிதர்கள் வேண்டிய அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வார்கள். மனதில் இருக்கக்கூடிய கோப உணர்வுகள் குறைந்து நல்ல குணம் அதிகரிக்கும்

HIGHLIGHTS

சோபகிருது வருட 12 ராசிகளுக்கான பலன்கள்
X

சோபகிருது வருடம் 

12 ராசிகளில் சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் பெயர்ச்சி ஆகக்கூடிய காலங்களை தமிழில் ஒவ்வொரு தமிழ் மாதமாகக் குறிப்பிடுகிறோம். சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய ராசியான மேஷத்தில் சூரியன் நுழையக்கூடிய காலத்தை சித்திரை மாதம் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டான சித்திரை 1 பிறக்க இருக்கிறது. இது சோபகிருது தமிழ் புத்தாண்டு ஆகும். ஆக இந்த சித்திரை புத்தாண்டு 2023-ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்

சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஐப்பசி மாதம் வரை மேஷ ராசியிலும் கேது பகவான் ஐப்பசி மாதம் வரை துலாம் ராசியில் பயணம் செய்வார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர்.

சோபகிருது வருட பலன்:

சோபகிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்

உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகு மென்றே யுரை.

சோபகிருது வருடத்தில் மனிதர்கள் வேண்டிய அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்வார்கள். மனதில் இருக்கக்கூடிய கோப உணர்வுகள் குறைந்து அவர்கள் இடத்தில் நல்ல குணம் அதிகரிக்கும். மங்கல நிகழ்வுகள் பல நடைபெறும். நன்மைகள் மென்மேலும் பெருகும். மழை பொழிவினால் உலகமெங்கும் செழிப்பு உண்டாகும்.

இந்த சோபகிருது வருடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் பலனை பார்க்கலாம்


வைராக்கியமும், மனவலிமையும் கொண்டு விளங்கும் மேஷ ராசிகாரர்களே !

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு 22.04.2023ல் குரு பெயர்ச்சியாகி வருவதும், ஆவணி மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சியாவதும் உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

இந்த ஆண்டு தொழில் மாற்றம், இடம் மாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் நிறைய பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கண்டிப்பாக புதிய தொழில் அமையக்கூடும்.

தமிழ் புத்தாண்டு முதல் உங்களின் வாழ்க்கை அபரிமிதமான வளர்ச்சியை பெறும். இதுவரை விரய குருவாக இருந்த குரு பகவான், ஜென்ம குருவாக அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்ப்பது நல்ல பலன்களை பெற்று தரும். குரு உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானதிபதி, விரயாதிபதியாக இருப்பது குரு பெயர்ச்சி மூலம் தன் வீட்டுக்கு தன ஸ்தானத்திலும், பூர்வ புண்ணியஸ்தானத்திற்கு உரிய ராசி என்பதால் குரு பெயர்ச்சி நல்ல விசேஷமான பலன்களை தரும். தொழிலில் முன்னேற்றம், புதிய தொழில் வளர்ச்சியைப் பெறுவதும். வேலை வாய்ப்பு அமையும். தந்தை வழி சொத்து பிரச்சனை தீர்வாகும். திருமண வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

ஏற்கனவே சனி உங்களுக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், அட்டம ஸ்தானத்தைப் பார்ப்பதும், உங்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கும், நல்ல பலனையும், ஆயுள் விருத்தியும், நோய் தீர்க்கும் வாய்ப்பையும் தரும். உங்களின் ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தால் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு சிறப்பான நற்பலன்களை பெற்றுத் தரும்.

ராகு / கேது பெயர்ச்சி மூலம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய கடன் தீர்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். தொலை தூர செய்திகள் உங்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக அமையும் வெற்றி மேல் வெற்றியை பெறும். சந்தர்ப்பம் அமைய பெறுவீர்கள். பொருளாதார மேன்மை பெறுவீர்கள்.


விருப்பமான விஷயங்களை தெளிவுபடுத்தும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து விரய, சுக, களத்திர ஸ்தானத்தை பார்ப்பது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், கூட்டு தொழிலுக்கும் மேன்மை தரும். உங்களின் யோகாதிபதி சனி என்பதால். உங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு கூடுதல் நல்ல பலன்களை அள்ளித் தருவார். தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மூலம் அரசியல் தொடர்புகள் உண்டாகும். சிலருக்கு அரசியலில் புதிய வாய்ப்பு கிடைக்க. பயணம் செய்ய வேண்டி வரும். ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட பொருட்கள், பணம் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த விடு கனவு நனவாகும்.

இந்த ஆண்டு குரு விரயத்தில் வருவதால், விரய செலவுகள் ஏற்படும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது நல்லது. வீடு கட்டும் பணி சிறப்பாக அமையும்.

பெண்களுக்கு திருமண தடை நீங்கி, திருமணம் நடக்கும். உங்களின் ராசிநாதன் இருக்கும் இடத்தை பொருத்து உங்களின் பொருளாதார நிலை மேன்மை அமையும். ஆன்மீக பயணம் மேற்கொண்டு, தொண்டு செய்யும் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைதுறையினருக்கு வெளிப்படையான வளர்ச்சி இருக்கும். கடினமான உழைப்பால் வளம் பெறுவீர்கள். பெண்களுக்கு ஆசைபட்ட வாழ்க்கை அமையும். உங்களை மதித்து நடக்கும் உறவினர்களின் உறவை பலபடுத்திக் கொள்வீர்கள்.

இந்த ஆண்டு ராசி / கேது பெயர்ச்சிக்கு பின்பு வெளிநாட்டு தொடர்புகள் மூலம் தொழில் வாய்ப்பை பெறுவீர்கள். முக்கிய தொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் பெருகும்.

ரிஷபம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் ஏதாவது கோயிகளுக்கு சென்று தெய்வத்தை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.


திறமையும், வளமையும், உறுதியும் கொண்டு விளங்கும் மிதுன ராசிகாரர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு லாபஸ்தானத்தில் அமர்வதும், ஆவணியில் ராகு / கேது பெயர்ச்சி மூலம் தொழில் வளர்ச்சியும், அமைய பெறுவீர்கள்.

உங்களின் யோகாதிபதி சனி பகவான் உங்களின் அனைத்து வளர்ச்சிகளுக்கு வளம் பெற செய்வார். உங்களின் தொழிலில் இருந்த பின்னடைவு மேன்மை பெறும். இதுவரை அட்டம சனியால் குடும்பத்திலும், தொழில் செய்யுமிடத்திலும் பல்வேறு பாதிப்புகளை அடைந்து வந்ததிலிருந்து விடுபட்டு, தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பவனி வருவீர்கள். கலைதுறையினருக்கு புதிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் பெறுவீர்கள். பணியிலிருந்து புதிய இடத்திற்கும் பதவி உயர்வு பெற்றும், ஏற்றம் பெறுவீர்கள். உங்களின் முயற்சிக்கு பக்கபலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

குரு லாபஸ்தானத்தில் வருவதால் உங்களின் செயல்களில் வேகமும் வெற்றியையும், பொருளாதார மேன்மையும் அடைய பெறுவீர்கள். வீடு கட்டுதல் காணி வாங்குதல், தங்க அணிகலன் வாங்குதல் வங்கி கடன் மூலம் தொழில் வளர்ச்சி பெறுதல் போன்ற நல்ல பலம்களை தொடர்ந்து பெறுவீர்கள். உங்களின் புத்திரர் வேலை வாய்ப்பையும், உயர் கல்வி வளர்ச்சியையும் பெறுவார்கள். கடன் தீர்க்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

ராகு / கேது பெயர்ச்சிக்கு போன்ற உங்களின் வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். முக்கிய தொழில் வாய்ப்புகள் உங்களை தேடிவரும். மன தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் வளம் பெறுவீர்கள். வயதானவர்களுக்கு உடல் நல குறைபாடு சரியாகும். மருத்துவத்தின் மூலம் உடல் நலன் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் இருந்த வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தை விட்டு நீண்ட தூரத்தில் இருந்தவர்கள் இப்போது தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம் ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுவருவது மிகவும் சிறந்தது.


விருப்பமான வாழ்வை தெளிவாய் அமைத்துக்கொள்ள விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் பின்பு தனஸ்தானத்தில் பார்வை அமைவதும். உங்களின் வாழ்வுக்கு சிறப்பான மாற்றம் உண்டாகும். அட்டம சனி காலம் என்பதால் பிணை கையெழுத்திடுவதும், யாருக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வரலாம் என்பதால், அனைவரிடமும் பேச்சை குறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதும் நன்மை தரும்.

தேவையில்லாத விஷயங்களுக்கு கூட வழக்குகள், பிறர் செய்த குற்றத்திற்கு பழி ஏற்பது போன்றவை ஏற்படும் என்பதால், அழைத்தாலும் செல்லாமல் தேவையான காரியங்களுக்கு மட்டும் சென்று வருவது நல்லது. கடன் படுதல், பழைய கடன் அடைத்தல், புதிய செலவுகள் மூலம் தேவைகள் அதிகபடுத்துதல் வரும் என்பதால், சில காரியங்களில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் அவசரமின்றி இருத்தல் நலம்.

புதிய திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. வெளிநாடு செல்லவும், வேலை வாய்ப்புகளுக்கு பணம் தருவதும் முழு உத்திரவாதம் இருந்தால் மட்டும் செயல்படுவது கவனம் அவசியம். குரு பார்வை பெறும் காலம் வரை கவனமுடன் இருந்தால் உங்களுக்கு நன்மை. உங்களின் யோகாதிபதி செவ்வாய் இருக்குமிடத்தை வைத்து சில காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அட்டம சனி காலங்களில் தெய்வ வழிபாடு மூலம் எதையும் பிரச்சனைமின்றி தடுக்கலாம். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டால் நன்மை உண்டாகும். சனி கொடுப்பதை யார் தடுக்க முடியும்? உங்களின் சுய ஜாதகத்தில் ஆறாமிடம், பனிரெண்டாமிடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு யோக சனியாக அள்ளிக் கொடுப்பார்.

வியாழக்கிழமையன்று குருபகவானை வழிபடுவது நல்ல பலன்களை பெற்று கொடுக்கும்.


தைரியத்துடனும், மனவலிமையுடனும் எதையும் சாதித்து காட்டும் சிம்ம ராசிகாரர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சாதகமாக எல்லா கிரகங்களும் அமைவதும். புத்தாண்டு துவங்கியதும் குரு பார்வை பெறுவதும், உங்களின் ராசியை குரு பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டு திறமையுடன் காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் செல்வாக்கு பெற்று மக்கள் மத்தியில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாராகடன் வசூல் ஆகும். முன்னே விட்டு பின்னால் பேசியவர்கள். உங்களின் தயவை வேண்டி வருவார்கள். எதிலும் பிறரின் ஆலோசனைகளை ஏற்காமல் உங்களின் முடிவுக்கு செயல்படுவீர்கள். வங்கி மூலம் கடன் பெறுவதும், தொழிலில் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதும், உங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள பயன்படும்.

உங்களுக்கு கண்டக சனி நடப்பதால் கூட்டுத் தொழிலில் வரவு செலவுகளை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது. பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவதும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கி கொள்வதும் நல்லது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். உங்களின் வேலை சார்ந்த பயணம், தொழில் சார்ந்த பயணம் சிறப்பாக அமையும். எதையும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். முக்கிய பணிகளில் அதிகம் நாம் உழைக்க வேண்டிவரும்.

உங்களின் ராசிநாதன் சூரியன் இருக்குமிடத்தை வைத்து சில நேரம் நற்பலன்கள் வந்து சேரும். எதையும் அலட்சியம் செய்யாமல் உணர்ந்து செயல்படுவது உங்களின் எதிர்கால நலனுக்கு நல்லது. அரசியல் ஈடுபாடுகளில் உங்களின் பலம் உயரும். கணித்தபடி சிலருக்கு புதிய பதவிகளும், செல்வாக்கும் உண்டாகும். கூட்டுத் தொழில் சிலருக்கு பாதிப்பை தரும். சுய ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் இருப்பதை பொறுத்து நற்பலன் கிட்டும்.

சனிக்கிழமையில் உங்களால் முடிந்த உணவை வாங்கி தானம் செய்வதும், சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்ல பலன்களை பெற்று தரும்.


காலத்திற்கு தகுந்தபடி செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வையுடன் பிறப்பதும் சனி யோகசனியாக ஆறாமிடத்தில் அமருவதும் உங்களின் அனைத்து காரியங்களுக்கும் நல்ல பலன்களை பெற்று தரும். உங்களின் ஐந்து மற்றும் ஆறாமிடத்து அதிபதியான சனி பகவான் ஆறாமிடத்தில் அமர்ந்து எட்டாமிடத்தையும், பனிரெண்டாம் இடத்தையும் மூன்றாமிடத்தையும் பார்ப்பது. உங்கள் மறைவு ஸ்தானம் பலப்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும் வீண் விரய செலவுகள் குறையும், வழக்குகள் சீக்கிரம் தீர்வாகும்.

பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். உடல் நலன் தேறி வளம் பெற்று நலம் பெறுவீர்கள். தொலை தூர செய்திகளின் மூலம் நன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வுகள் கிட்டும். எதையும் மிகைபடுத்தாமல் நிறைவான பணிகளை தொடர்ந்து செய்வீர்கள். இனி குரு உங்களின் ராசிக்கு எட்டாமிடத்தில் 22.04.2023 முதல் மறைவு பெறுவதால் பண தட்டுபாடு இருந்தாலும் சனி அருளால் உங்களுக்கு அதனை சரி செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

எட்டாமிடத்தில் அமர்ந்து பனிரெண்டாமிடத்தை பார்ப்பதால் நற்பலன் உண்டாகும். புதிய வாகனம் வாங்குதல், வீடு பழுது பார்த்தல், மருத்துவ பரிசோதனை மூலம் உடலை பராமரித்து கொள்தல் போன்ற சுபசெலவுகள் உண்டாகும். கலைத்துறை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மீன் தொழிலில் வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். தாயார் உடல் நலனின் முன்னேற்றம் உண்டாகும். சரியான நேரத்தில் உங்களின் காரிய அனுகூலமான சில பணிகளில் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக பணி செய்து வருவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

நரசிம்மர் வழிபாடு சிறந்த பலன்களை தரும். நரசிம்மர் கோயில் இல்லை என்றால் பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதும் சிறந்த பலன்களை அளிக்கும்.

துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கான ஆண்டு பலனுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Updated On: 13 April 2023 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...