/* */

காந்தி காலத்தில் மட்டுமல்ல... இப்போதும் தேவை அகிம்சை வழி

இந்திய நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை அகிம்சையால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திலும் மனிதன் நிம்மதியாக வாழ, அகிம்சை வழியே சிறந்ததாக இருக்கிறது.

HIGHLIGHTS

காந்தி காலத்தில் மட்டுமல்ல... இப்போதும் தேவை அகிம்சை வழி
X
காந்தி வழி நடப்போம்.

கடந்த 1869 ஆம் ஆண்டில் பிறந்து, 1948 ஆம் ஆண்டு வரை 79 ஆண்டுகள் வாழ்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். காந்தி தனது பள்ளிப்படிப்பிற்கு பிறகு 'பாரிஸ்டர்' எனப்படும் வழக்கறிஞர் படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். தென்னாப்பிரிக்காவில் பணியாற்றியபோது இவருக்கு ஏற்பட்ட இனப்பாகுபாடு மற்றும் நிறவெறி பேதம் போன்ற கசப்பான அனுபவங்களே அவர் மாபெரும் அரசியல் சக்தியாக உருவாகக் காரணமாக அமைந்தது. இதுவே அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது.

'சத்தியாகிரகம்' என்னும் அறவழியில், இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் மகாத்மா. காந்தியின் அகிம்சை வழி இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் பாடமாக அமைந்தது. மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பாரக் ஒபாமா,ஆங் சான் சூச்சி ஆகிய பல உலகத் தலைவர்கள் காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்.

காந்தியின் அரசியல் தத்துவத்தின் சாரம் என்பது, 'சந்தேகத்துக்கு இடமின்றி, பிறருக்கான அதிகாரமளிப்பு' என்ற கருத்தாக்கம்தான். இதில் பாலினம், இனம், வர்க்கம், மதங்கள் என்ற வேற்றுமை இருந்ததில்லை.


காந்தியின் அகிம்சை முறை நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்திற்கும் உதவும் என்பதை உணர்த்து கொள்ள அவரது முத்துகள் சில:

* தங்கம் மற்றும் வெள்ளி செல்வமல்ல, உடல்நலனே உண்மையான செல்வம்.

* உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது எனது மதம்.

* நேர்மையான கருத்து வேறுபாடு, முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறி.

* எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.

* மனிதகுலத்தின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி அகிம்சை.

* என் வாழ்க்கையே எனது செய்தியாக உள்ளது.

* கோபம் மற்றும் சகிப்பின்மை ஆகியவை சரியான புரிதலின் எதிரிகள் ஆகும்.

* வன்முறையின் மிக மோசமான வடிவம் வறுமை.

* என்னுடைய அனுமதி இல்லாமல், யாரும் என்னை புண்படுத்த முடியாது.

* மனிதநேயம் ஒரு கடல்; கடலின் சில துளிகள் அசுத்தமானால், முழு கடலும் அசுத்தமாவதில்லை.

* மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிய சிறந்த வழி.

* ஒரு நாட்டின் கலாசாரம், அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் வாழ்கிறது.

மனித பிறவி என்பது, மனிதனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அரிய வாய்ப்பு. மங்கையராக பிறப்பதற்கு மட்டுமல்ல, மனிதனாக பிறப்பதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். புண்ணிய பூமியில் வாழ, மனித பிறவி அமைவது அபூர்வமானது. அத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த மானுட வாழ்வை பயனுள்ள வகையில் வாழ வேண்டும். மற்றவர்களுக்கும், நம் வாழ்வு உதவியாக அமைய வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வு, காலம் தோறும் போற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட மிக உயர்ந்த நிலையில் காந்தி, 'மகாத்மா'வாக வாழ்ந்தார். அவரது அகிம்சை வழியில் நாம் நடந்தால், நிச்சயம் நல்ல மனிதனாக நாமும் வாழலாம். தீபாவளி பண்டிகை நாளில், இந்த உறுதிமொழியை வாழ்வை சிறப்பாக்க ஏற்போம்.

Updated On: 24 Oct 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...