/* */

Kandha sasti lyrics-கந்தசஷ்டி கவசம் பாடி, வந்த வினை தீர்ப்போம் வாங்க..!

கந்தசஷ்டிக் கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் முருகனிடம் வேண்டி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டியை அரங்கேற்றினார்.

HIGHLIGHTS

Kandha sasti lyrics-கந்தசஷ்டி கவசம் பாடி, வந்த வினை தீர்ப்போம் வாங்க..!
X

Kandha sasti lyrics-கந்த சஷ்டி கவசம் (கோப்பு படம்)

Kandha sasti lyrics

கந்தசஷ்டி விரதம் என்றால் என்ன?

கந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.


Kandha sasti lyrics

கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர் யார்?

கந்தசஷ்டிக் கவசம் தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட துதிப் பாடலாகும். ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே கந்தர் சஷ்டி கவசம் பாடியுள்ளார். அவற்றுள், திருச்செந்தூர் சஷ்டிக் கவசமே மிகவும் பிரபலம். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு.

குறள் வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும்,

நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்

சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணி யாட

மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்

Kandha sasti lyrics

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து

வர வர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திர முதலா எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக


வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹணபவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம

நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக

ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்

உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்

கிலியும் செளவும் கிளரொளி ஐயும்

நிலை பெற் றென்முன் நித்தம் ஒளிரும்

Kandha sasti lyrics

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்

குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறு உந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை அழகும் இணைமுழந்தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோதனென்று

Kandha sasti lyrics

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்

என்தலை வைத்துன் இணையடி காக்க

என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க


பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

Kandha sasti lyrics

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கையிரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க


எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனக வேல் காக்க

வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அறையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட

இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

Kandha sasti lyrics


காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

படியினில் முட்ட பாசக்க யிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கால்கை முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெருண்டது வோட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட


தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்

நில்லா தோட நீ எனக் கருள்வாய்

ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

Kandha sasti lyrics

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரஹண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவம்ஒளி பவனே

அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே

இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பால குமாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யான் உனைப் பாட

எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவசமாக

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத் தாக வேலா யுதனார்


சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்

பெற்றவள்குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து

மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேச முடன்ஒரு நினைவது வாகி

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

Kandha sasti lyrics

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாற் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத்மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவ போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி


திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே

மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவ ஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்.

Updated On: 15 Sep 2023 5:06 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?