/* */

கஷ்டங்கள் நீங்கணுமா..? தினந்தோறும் கந்த சஷ்டி கவசத்தை படிங்க..!

Kandha Sasti Kavasam Lyrics in Tamil - தமிழகத்திலுள்ள அறுபடை வீடுகளான முருகன் கோயில்கள் அனைத்துமே சிறப்பு மிக்கவை. நாம் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில்கள் இவை.

HIGHLIGHTS

கஷ்டங்கள் நீங்கணுமா..? தினந்தோறும்  கந்த சஷ்டி கவசத்தை படிங்க..!
X

திருச்செந்துார் முருகனின் சிறப்பு தோற்றம்  (கோப்பு படம்)

Kandha Sasti Kavasam Lyrics in Tamil -

மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். அதனை சமாளித்து நாம் இரண்டையும் ஏற்றுக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் வாழ்க்கை முறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். யாருக்குமே அவர்களுடைய வாழ்க்கை முழுவதுமாக இனிமையாகவே இருக்காது. அதேபோல் வாழ்வு முழுவதும் துன்பங்களாகஇருக்காது. இன்பமும், துன்பமும் நாம் வாழப்போகும் வாழ்க்கை முறையில்தான்இருக்கிறது.ஒரு சில துன்பங்கள் தாமாக நம்மைத்தேடி வரும். ஒரு சில துன்பங்கள் நாம் அளவுக்கு மீறி ஆசைப்படுவதினால் நாமே தேடிக்கொண்டதாக இருக்கும். இன்பங்கள் எப்போது வந்தாலும் அதனால் நமக்கு எந்த பிரச்னைகளும் வராது. என்ன? ஒரேடியாக நாம் சந்தோஷமாக இருந்துவிடக்கூடாது. எது வந்தாலும்அ தனை பக்குவத்துடன் கையாண்டால் எல்லா துன்பங்களும் நம்மைவிட்டு பனிபோல்விலகிவிடும்.

ஒருசிலர் இருக்கிறார்கள். கஷ்டம்னு வந்தா மட்டும் கோயில் கோயிலா சுத்துவார்கள். பின்னர் அந்த கடவுளைக்கூட கண்டுக்க மாட்டார்கள். அதுபோல்சுயநலவாதிகள் இருக்கின்றனர். ஆனால் நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை ஆட்டுவிக்கிறது என்பதை நாம் அனைவருமே உணரவேண்டும். இருக்கிறார், இல்லை என்பது பற்றி பேச்சு இங்குவேண்டாம். அந்த சக்தியானது நம்மைக் கண்காணிக்கிறது என்ற பயத்தோடு நாம் வாழ்ந்தோமானால் நம் வாழ்க்கையானது சிறக்கும்.வாழ்க்கையில் யாருக்கும் பயப்படாவிட்டால் கூட அந்த கடவுளுக்கு பயப்பட வேண்டும்.

kandha sasti kavasam lyrics


பழனிமலை முருகன் ராஜ அலங்காரத் தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

ஆனால் இக்கால இளைய தலைமுறைகளுக்கு ஆன்மீக விஷயத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. காரணம் பெற்றோர்கள் கோயிலுக்கு செல்கையில் அவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லவேண்டும். கடவுள் என்பவர் உள்ளார். அவருக்காவது நாம் பயப்படணும் என்ற விதையை அவர்கள் மனதில் போடணும். அப்போதுதான் அவர்களும் கட்டுப்பாடான ஒழுக்க நெறிமுறைகளை அனுசரித்து வாழக்கற்றுக்கொள்வார்கள்.

சரி நாம் சப்ஜெக்டுக்கு வந்துடுவோமா? கந்த சஷ்டி கவசம். இதனைக் காலையில் குளித்து விட்டு ஒரு முறை உங்கள் மனதார தெய்வத்தின் முன் நின்று பாடிப்பாருங்கள். இப்போதெல்லாம் எம்பி3 ஆடியோவில் போட்டுவிட்டு அவர்களும் கூட சேர்ந்து பாடுகின்றனர். சரி அது உங்கள் விருப்பம்...நீங்கள் எப்படி பாடினாலும் சரி ,....மனதார பயபக்தியோடு இறையருள் வேண்டி பாடுங்க.... நிச்சயம் உங்க கஷ்டத்தினை அந்த முருகன் அதாவது கந்தன் தீர்த்துவைப்பார்.... அதுவும் செவ்வாயன்று பாடினால் விசேஷமோ...விசேஷம்.... பாடுங்க... பக்தியோடு...இதோ அந்த பாடல் வரிகள் உங்களுக்காக.....

kandha sasti kavasam lyrics

நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை.

குறள் வெண்பா

அமரரிடர் தீர வமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணியாட

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலாய் எண்திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக….



பழனி மலைக் கோயிலின் தோற்றம் தங்க விமானத்தோடு (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக

ரகணபவச ரரரர ரரர

ரிகண பவச ரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீராநமோ நம

நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னையாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

kandha sasti kavasam lyrics


சிறப்பு அலங்காரத் தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் திருத்தணி முருகன் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

கிலியும் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடியாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்


ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்


திருத்தணி முருகன் கோயில் தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொக மொக மொகமொக மொக மொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்

என் தலைவைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க


என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடையழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

ஐவிரலடியினை அருள் வேல் காக்க

கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

kandha sasti kavasam lyrics


திருச்செந்துாரின் கடலோரத்தில் செந்தில்நாதன் குடிகொண்ட கோயில் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலு மிருட்டிளும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

kandha sasti kavasam lyrics


மதுரை திருப்பரங்குன்றம் முருகன் வள்ளி தெய்வானை சமேதரருடன் சிறப்பு அலங்காரத்தில் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய் விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட

kandha sasti kavasam lyrics


மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

உன்னைத் துதித்த உன்திருநாமம்

சரவணபவனே சைலொளிபவனே

திரிபுரபவனே திகழொளிபவனே

பரிபுரபவனே பவமொழிபவனே

அரிதிருமுருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்

kandha sasti kavasam lyrics


சுவாமி மலையில் வீற்றுள்ள முருகன் சிறப்பு அலங்காரத்தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா

பழநிப் பதிவாள் பாலகுமரா

ஆவினன் குடிவாள் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக

ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

kandha sasti kavasam lyrics


சுவாமி மலை முருகன் கோயிலின் முகப்பு கோபுரத் தோற்றம் (கோப்பு படம்)

kandha sasti kavasam lyrics

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்

கந்தசஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடனாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேச முடனொரு நினைவதுமாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு


ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசைமன்ன ரென்மர் செயலதருள்வர்

மாற்றலாரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத்தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலக்ஷமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாக

சூரபத்மாவைத் துணித்தகையதனால்

இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குறமகள் மணமகள் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெற்றி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்

என்று மனமுருக பாடிப்பாருங்கள்...உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் விலகிச்செல்வதை நீங்களே காண்பீர்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!