/* */

kanda sasti kavasam lyrics-துன்பங்கள் போக்கும் 'கந்தசஷ்டி' கவசம்..! பாடுவோம் வாருங்கள்..!

kanda sasti kavasam lyrics-கவசம் என்பது பாதுகாப்பு அரண் என்று கூறலாம். அதைப்போல கந்த சஷ்டி கவசம் என்பது துன்பங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் கவசம் என்று பொருள் கொள்ளலாம்.

HIGHLIGHTS

kanda sasti kavasam lyrics-துன்பங்கள் போக்கும் கந்தசஷ்டி கவசம்..! பாடுவோம் வாருங்கள்..!
X

kanda sasti kavasam lyrics-கந்த சஷ்டி கவசம் (கோப்பு படம்)

kanda sasti kavasam lyrics-கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றிப் பாடும் கவசப்பாடல்கள் ஆகும். தேவார சுவாமிகள் இதை இயற்றியுள்ளார். கந்த சஷ்டி கவசம் முதன் முதலில் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமான் மீது பாடப்பட்டது என்று கூறப்படுகிறது.

கந்த சஷ்டி கவசத்தை வீடுகளில் முருகப்பெருமான் படத்தின் முன்பு அல்லது முருகன் கோவில்களிலோ அல்லது அறுகோண சக்கரத்தின் முன்போ பாடலாம்.


காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;

நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசந்தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி..

நூல்

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணியாட

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்


கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

kanda sasti kavasam lyrics

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவணபவனார் சடுதியில் வருக

ரகணபவச ரரரர ரரர

ரிகண பவச ரிரிரி ரிரிரி

விணபவ சரவண வீராநமோ நம

நிபவ சரவண நிற நிற நிறென்

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னையாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்

பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்


kanda sasti kavasam lyrics

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடியாறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொக மொக மொகமொக மொக மொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து


kanda sasti kavasam lyrics

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்றும்

உன் திருவடியை உறுதியென்றெண்ணும்

என் தலைவைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவியிரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க


kanda sasti kavasam lyrics

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடையழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரலடியினை அருள் வேல் காக்க

கை களிரண்டும் கருணை வேல் காக்க

முன் கையிரண்டும் முரண்வேல் காக்க

பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க

நாவிற் சரஸ்வதி நற்றுணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க

அரையிருள் தன்னில் அணையவேல் காக்க


kanda sasti kavasam lyrics

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்

அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

kanda sasti kavasam lyrics

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்

விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட

ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்


காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

kanda sasti kavasam lyrics

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய் விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடனங்கம் கதறிடக் கட்டு

கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

kanda sasti kavasam lyrics

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்


சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்தரணை பருஅரையாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்

ஈரேழுலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்

மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக

kanda sasti kavasam lyrics

உன்னைத் துதிக்க உன்திருநாமம்

சரவணபவனே சைலொளிபவனே

திரிபுரபவனே திகழொளிபவனே

பரிபுரபவனே பவமொழிபவனே

அரிதிருமுருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா

தணிகாசலனே சங்கரன் புதல்வா


கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாள் பாலகுமரா

ஆவினன் குடிவாள் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக

ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை

kanda sasti kavasam lyrics

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக

அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்

கந்தசஷ்டி கவசம் விரும்பிய


பாலன் தேவராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துடனாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேச முடனொரு நினைவதுமாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

kanda sasti kavasam lyrics

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்

திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்

மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்

கந்தர் கை வேலாம் கவசத்தடியை

வழியாய் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வசத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாக

சூரபத்மாவைத் துணித்தகையதனால்

இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குற மகள் மன மகிழ் கோவே போற்றி

kanda sasti kavasam lyrics

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பாயுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்..!

Updated On: 24 Nov 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  3. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  5. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  6. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  7. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  8. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  10. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!