/* */

Kadavul Quotes in Tamil-உயிர்மூச்சாக காற்றில் கலந்து இருக்கும் இறைவன்..!

இறைவன் என்பவன் கோவிலில் மட்டுமல்ல மக்களோடு மக்களாக உலா வந்துகொண்டுதான் இருக்கிறான், இறைவனின் தூதுவர்களாக.

HIGHLIGHTS

Kadavul Quotes in Tamil-உயிர்மூச்சாக காற்றில் கலந்து இருக்கும் இறைவன்..!
X

kadavul Quotes in Tamil-இறைவன் மேற்கோள்கள். (கோப்பு படம்)

Kadavul Quotes in Tamil

இறைவன், கடவுள், ஆண்டவன் என்றெல்லாம் போற்றப்படும் அவர் யார் கண்களுக்கும் தெரியாதவர். ஆனால், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனித வடிவில் வந்து உதவுகிறார். அதுதான் கடவுள். எல்லா மதங்களிலும் இறை ஒன்றுதான். நோக்கமும் ஒன்றுதான். வரும் வழிகள் மட்டுமே வேறு வேறு. ஆனால் சென்றடையும் இடம் என்னவோ ஒன்றுதான். ஆமாம், அது இறைவன் பாதம்.

Kadavul Quotes in Tamil


இந்த கட்டுரையில் இறைவன் பற்றிய மேற்கோள்களை காண்போம் வாங்க. படிங்க. இறையருள் பெறுங்க.

1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..!

2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.

3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின் வடிவமே.

4. தெய்வமே துணை என்று இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் கடமையாற்றுவதில் கண்ணாக இருப்பர்.

5. உள்ளத்தை கடவுளுக்குப் பலியாக கொடுத்து விடுங்கள். அதுவே சிறந்த யாகம்.


Kadavul Quotes in Tamil

6. இறைவனை முழுமையாக நம்பு.. உண்மையை மட்டும் பேசு.. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.

7. பக்தி பக்குவம் அடையும் போதுதான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.

8. சுயநலத்தை விடு, தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.

9. நம்முடைய விருப்பப்படி உலகில் எல்லாம் நடப்பது இல்லை. தெய்வத்தின் விருப்பப்படியே உலகம் இயங்குகிறது.

10. உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே மனம் தைரியமாக இருக்கும். தைரியம் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தி ஏற்படும்.


Kadavul Quotes in Tamil

11. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.

12. எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பான் என்று மனதிற்குள் எப்போதும் சொல்லிக் கொண்டால் இன்பம் பெருகும்.

13. உதவும் மனப்பான்மை இல்லாதவன் செலுத்தும் தெய்வ பக்தி வெறும் வேஷமே.

14. கற்சிலையில் மட்டுமல்ல, உலகில் எல்லா உயிர்களும் கடவுளின் வடிவங்களே.

15. உலகம் என்னும் உடம்பை உயிராக இருந்து இயக்குபவர் கடவுளே.


Kadavul Quotes in Tamil

16. கடவுளை நம்பிச் சரணடைந்தால் அவர் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை.

17. கடவுளுக்கு நிகராக வாழ வேண்டுமென்றால் மற்றவர்களை ஏமாற்ற கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாலே போதும்.

18. இயற்கையும் இறைவனும் ஒன்றே. நிலம், நீர், தீ, காற்று, வானம், என அவரே எல்லாமுமாக இருக்கிறார்.

19. ஈரமில்லாத மனம் படைத்தவன் இறைவனைக் காண முடியாது. எதிரிக்கும் உதவும் இரக்கம் வேண்டும். மனதில் பாரம் இருந்தால் அதை இறைவனின் தலையில் இறக்கி வைத்து விடுங்கள்.

20. உன் மீது நம்பிக்கை வைக்காமல் ஆயிரம் கடவுள்கள் மீது நம்பிக்கை வைத்து பயனில்லை.


Kadavul Quotes in Tamil

21. உண்டியலில் காசு போட்டு விட்டான் என்பதற்காக கடவுள் ஒருவரையும் காப்பாற்ற மாட்டார்.. போட்டதற்காக இன்னொருவனை தண்டிக்கவும் மாட்டார்.

22. நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்.

23. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய துன்பம் என்று இறைவனிடம் சொல்லாதே உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த துன்பத்திடம் சொல்.!

24. உன்னால் இங்கு எதுவும் ஆகாது என உணர்ந்து கொள்.. உன் இறைவன் தான் உன்னை காப்பான் என்று நம்பு.!

25. ஏழைகளை அழ வைத்து அழகு பார்ப்பவன் இறைவன்.. அந்த அழும் நிலையிலும் இறைவனை அழகுபடுத்தி பார்ப்பவன் ஏழை.


Kadavul Quotes in Tamil

26. உன் துன்பங்களை இறைவனிடம் மட்டுமே சொல்லி அழு.. ஏனெனில் அவர் மட்டும்தான் அதை வேறு யாரிடமும் சொல்லி சந்தோசப்பட மாட்டார்.

27. தாய் உணவு ஊட்டி வளர்க்கிறாள்.. ஆண்டவன் சோதித்து வளர்க்கிறான்.

28. பசித்த உயிருக்கு உணவளிப்பவன் கடவுள். தன் பசி பொறுத்து பிறர் பசி ஆற்றுபவன் கடவுள்.

கிடைத்ததை பகிர்ந்து உண்பவன் கடவுள். பிறர் துயர் துடைப்பவன் கடவுள். கடவுளை தேடாதே மனிதத்தை தேடு.

29. நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய், நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!!

30. உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன் மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு. தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று நம்பிக்கையோடு இரு.


Kadavul Quotes in Tamil

31. உங்களையும் இறைவனையும் இணைக்கும் ஊசியாக குரு இருக்கின்றார்.. நூலாக நீங்கள் அவரை பின்தொடர்வதின் மூலமே இரண்டற கலக்க முடியும்.

32. பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள். படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள். அதுதான் வாழ்க்கை ...

33. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

34. துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்.. அனைத்தையும் ரசிக்க கற்றுக்கொள்..!

35. இறைவனின் கருணை உள்ளம் தான்.. கொசுவின் கொடுக்கில் தேளின் விஷம் வைக்கப்பட வில்லை என்பது...


Kadavul Quotes in Tamil

36. கடவுள் இருப்பிடம் கல்லிலோ, மரக் கட்டையிலோ, மண்ணிலேயோ இல்லை. மனிதர்களின் உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும்தான்...!

37. இறைவா எந்த மனிதனிடத்தில் துயரத்தை சொன்னாலும் கேலி செய்வான். நீ அவற்றை பொறுமையாக கேட்கவேண்டும் என்றுதான் உன்னை கல்லாக படைத்திருக்கிறார்கள்.- கண்ணதாசன்

38. கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை, என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுள் பக்கமே உள்ளது கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.

39. கடவுளை நம்புவது நம்பிக்கை உன்னை நீ நம்புவது தன்னம்பிக்கை

40. ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.- கவிஞர் கண்ணதாசன்


Kadavul Quotes in Tamil

41. நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

42. கருணையோடு இருப்பவர்கள் எல்லாம் கடவுளின் மறுபிறவிகளே

43. பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால்.. செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்....

44. காரணம் இல்லாமல்.... கவலை கொள்ளாதே காரணம் இருந்தாலும்.... கலக்கம் கொள்ளாதே.... எதுவும் கடந்து போகும்... இதுவும் கடந்து போகும்..

45. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.- அகத்தியர்


Kadavul Quotes in Tamil

46. கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும், சாபம் ஆக்குவதும் உன் கையில்தான் உள்ளது...!

47. உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இரு....! இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இரு..! |

48. கவலைகளை அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.. இனி கடவுளை அவள் பார்த்துக்கொள்வாள்..

49. உன்னை விட உனது பிரச்சனைகளை பற்றி உன்னை படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும்... அவன் மீது முழு நம்பிக்கை வை, அவன் உன்னை காப்பான்....

50.எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்.


Kadavul Quotes in Tamil

51. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே... உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்...!

52. நினைப்பவை எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நல்ல முறையில் நடக்கும்..! கடவுள் ஆசைப்பட்டால் மட்டும்..!!

53. நஞ்சு கூட நன்மை பயக்கும் நமசிவாய நாமம் போற்றினால் !!

54. கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு நாம் தினமும் போடுகின்றோம் வேஷம்!

55. கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.


Kadavul Quotes in Tamil

56. போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம். எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்..!

57. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

58. உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் ஈவ் உடல் படைக்க பட்டிருக்கிறது

59. சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...

60. பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே - இராமலிங்க அடிகளார்


Kadavul Quotes in Tamil

61. பக்தி என்பது நம் ஆசைகளை கட்டுப்படுத்த தானே தவிர, நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல...

62. படைத்தவன் துணை இருக்க.. அடுத்தவன் துணை எதற்கு..?

63. "சாவி" இல்லாத பூட்டை "மனிதன்" உருவாக்குவதில்லை ! அதுப்போல "தீர்வு” இல்லாத பிரச்சனைகளை "இறைவனும்" அனுமதிப்பதில்லை !

64. நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

65. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.


Kadavul Quotes in Tamil

66. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

67. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்!

68. என் இயேசு மட்டுமே அறிவார்...... என் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத சில கண்ணீர் துளிகளை!

69. உன் பசியறிந்து உனக்கு அல்லாஹ் வழிகாட்டுவார்.

70. பிறர் பசியை போக்க நீ முற்படு. அல்லாஹ் உன் பாத்திரங்களை நிரப்புவார்.

Updated On: 24 Oct 2023 9:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  6. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  8. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  10. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...