/* */

தர்மத்தின் வழி நடந்தால்... 'தர்மசாஸ்தா' ஐயப்பன் உங்களுடன் வருவார்!

ஐயப்ப சுவாமியை ‘தர்மசாஸ்தா’ என்று அழைக்கிறார்கள். அதற்கான காரணம் தெரிந்தால், நீங்கள் தர்மத்தின் தலைவனாக மாறி, ஐயப்பனின் பேரருளை பெறுவீர்கள்.

HIGHLIGHTS

தர்மத்தின் வழி நடந்தால்... தர்மசாஸ்தா ஐயப்பன் உங்களுடன் வருவார்!
X

தர்மத்தின் வழி நடந்தால், ‘தர்ம சாஸ்தா’வின் அருளை பெறலாம்.

ஐயப்ப சுவாமியை பலவித பெயர்களைச் சொல்லி அழைத்து வழிபடுகிறோம். மணிகண்டா, சபரிமலை வாசனே, நெய் அபிஷேக பிரியனே, புலி வாகனனே பலவிதமாக பெயர்கள் அவருக்கு உள்ளன. இதில், 'தர்மசாஸ்தா' என ஐயப்ப சுவாமியை அழைப்பது பற்றி அறிந்துகொள்வோம்.

புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான் ஐயப்ப சுவாமி. மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவரும் ஐயப்ப சுவாமிதான். மற்ற கடவுளுக்கு மாலை போடும் பக்தர்களை விட, ஐயப்ப சுவாமிக்கு மாலை போடும் பக்தர்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐயப்ப சுவாமிக்கு 'தர்மசாஸ்தா' என்ற பெயர் சொல்லி அழைப்பதும், அதற்கு பொருள் என்னவென்றும் தெரிந்து கொள்வோம்.

'சாஸ்தா' என்ற வார்த்தைக்கு, 'உன்னத ஆட்சியாளர்', 'கட்டளையிடுபவர்', 'ஆள்பவர்' மேலும் 'தவறு செய்பவரை தண்டிப்பவர்' என்றும் பலவிதமான அர்த்தங்கள் உள்ளது. முருகப்பெருமானை 'பிரம்ம சாஸ்தா' என்று அழைப்போம். ஏனெனில், அவர் பிரம்மனுக்குக் கட்டளையிட்டவர். வீரபத்ரரை தக்ச சாஸ்தா என்பர். காரணம், அவர் தக்ச பிரஜாபதியை தண்டித்தார்.

ஹரிஹர புத்திரனை, 'தர்மசாஸ்தா' என்று அழைக்கக் காரணம், அவர் தர்மத்தை நிலைநாட்டி ஆட்சி புரிகிறார். தர்மம் என்பது மனித வாழ்க்கையின் ஆணிவேர். தர்மம் சர (அறத்தைச் செய்) என்று வேதம் கூறுகிறது. தர்மமானது ஒரு மனிதன் அறவழியில் நடப்பதற்கான பாதையாக, இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.


ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது நல்ல செயல்கள் அனைத்தும் தானாக நடக்கும். கிருஷ்ணபரமாத்மாவும் கீதையில் இதைத்தான் சொல்கிறார். 'எங்கு தர்மம் அழிகிறதோ, நான் அங்கு வந்து தர்மத்தை நிலை நாட்டுவேன்' என்றும், 'இந்த தர்மத்தால்தான், இன்று அகிலம் தழைத்து நிற்கிறது,' என்றும் கூறுவார்.

ஒருவன் எப்போது தர்மத்தை நிலை நாட்டுகின்றானோ, அப்போது அந்த செயல் இந்த அகில உலகத்தையும் பாதுகாத்து, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது. நாளடைவில், இந்த தர்மம் அவனை தெய்வீகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. இதுதான் தத்வமஸி. அந்த தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக இருப்பதால், ஐயப்பனை 'தர்மசாஸ்தா' என்று அழைக்கிறோம்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம்

வரம் வாமஹஸ்தம் சஜாநு}பரிஸ்தம்

வஸந்தம் சதா யோக பட்டாபிராமம்

பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பு தனாதம்.

வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே!

தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே!

மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே!

புதங்களின் நாதனாக திகழ்பவனே!

ஹரிஹரபுத்திரனே!

ஐயப்ப சுவாமியே, உன்னை வழிபடுகிறேன்!!!

சுவாமியே சரணம் ஐயப்பா..

எனவே, ஐயப்ப சுவாமியை வழிபடும் நாம், அவர் காட்டிய தர்மத்தின் வழி நடப்போம். வாழ்வின் நன்மை பெறுவோம்.

Updated On: 20 Nov 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’