/* */

ஆஞ்சநேயா.....ஆஞ்சநேயா.... கஷ்டத்திலிருந்து விடுதலைப் பெற ஹனுமன் சாலீசாவைப் படியுங்க....

Hanuman Chalisa in Tamil- அனுமனை வணங்கினால் நம்முடைய கஷ்டங்கள் பனி போல் விலகிவிடும். இது உள்ளத்தின் உண்மையான வார்த்தை. மிகவும் சக்தி வாய்ந்த ஆஞ்சநேயருக்கு அனுமன் சாலீசாவைதினமும் பாராயணம் செய்யுங்க... அப்புறம் பாருங்க... மாற்றத்தினை...

HIGHLIGHTS

ஆஞ்சநேயா.....ஆஞ்சநேயா....   கஷ்டத்திலிருந்து விடுதலைப் பெற   ஹனுமன் சாலீசாவைப் படியுங்க....
X

சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் (கோப்பு படம்)



தங்கக்கவசத்திலும், ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர். (கோப்பு படம்)

Hanuman Chalisa in Tamil-வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நாம் இன்பமாகவே இருந்துவிடமுடியாது. ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு பிரச்னைகளை வெவ்வேறு முறையில் சந்தித்து வருகிறோம். அதேபோல் பக்தி என்பது நம்முடன் பிறந்தது. இதனை நாம் தினந்தோறும் இறைவனின் திருநாமத்தினைச் சொல்லி வணங்கவேண்டும்.கஷ்டங்கள் வரும்போது மட்டும் கடவுளை நினைத்தால் அவர் நமக்கு அருள்புரிய மாட்டார். சந்தோஷத்திலும் கடவுளை நாம் நினைத்து தொடர்ந்து வணங்க வேண்டும். இலங்கையில் ராவணனிடம் இருந்து சீதையை மீட்க அனுமன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சுந்தர காண்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கஷ்டம் வரும்போது இதனை மானசீகமாக படிப்பவர்களுக்கு பனி போல துன்பங்கள் விலகிவிடும். விலகியுள்ளது இது அனுபவ பூர்வமான வார்த்தை.

அதுபோல் ராமரின் தீவிர பக்தனான ஆஞ்சநேயரின் பக்தியைப் போற்றும் விதமாக அனுமன் சாலீஸாவின் மகத்துவத்தினைப் பற்றியும், அனுமன் சாலீசாவை பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஸ்ரீ ராமஜெயம் என்ற வார்த்தைகளை வாய் விட்டு சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே புல்லரிக்கும் அந்த அளவிற்கு மகத்துவம் பொருந்தியது. ஸ்ரீராமரை தன் உயிராக நினைத்தவர் ஆஞ்சநேயர். அனுமன் பெயரைச் சொன்னாலே துன்பங்கள்,நம் கஷ்டங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் உள்ளிட்டவைகள் விலகிவிடும்.

ஆஞ்சநேயரின் அருளைப் பெற துளசிதாசர் வடமொழியில் அருளிய அனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை சொல்லி நம்முடைய கஷ்டங்களை விலக்கிக் கொள்வோம்.


ராமர் பட்டாபிஷேகத்தில் மானசீகமாக அவரை வணங்கும் ஆஞ்சநேயர் (கோப்பு படம்)

எப்படி பாராயணம் செய்வது?

காலையில் நீராடிவிட்டு உள்ளத்துாய்மையுடன் துாய ஆடைகளை உடுத்திக்கொண்டு மாருதியை மனதார நினைத்துக்கொள்ளுங்கள்.பின்னர் தியானம் செய்ய வேண்டும். இறைவனுக்கு நெய்விளக்கேத்திவிட்டு இங்கு அளித்துள்ள துதிகளை 11 முறை பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் மந்திரத்தினை படித்து முடித்தபின்னர் ஆஞ்சநேயர் பாதங்களில் அவரை மானசீகமாக வணங்கிவிட்டு பொற்பாதங்களில் மலர்களை சமர்ப்பியுங்கள்.

ராமநாமத்தின் மகிமையைச் சொல்லவே வேண்டாம். அவ்வளவு வலிமை வாய்ந்த எழுத்து ''ராம ராம...''

காஞ்சிப் பெரியவர் ராம நாமத்தின் மகிமைக் குறித்து சொல்லும்போது, ராமா என்று சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள் என்றார்.


வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அனுமன் (கோப்பு படம்)

அனுமன் சாலீசாவைக் கோயில்களிலோ அல்லது வீட்டிலோ சுத்தமான இடத்தில் அனுமன் படத்தினை அலங்கரித்து வைத்து அதன் முன் அமர்ந்து மானசீகமாக பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராமரையும் அனுமனையும், மானசீகமாக மனதில் நினைத்துக்கொண்டு செவ்வாய், அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யவேண்டும்.ராமர் மற்றும் அனுமனை மனதில் நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது அனைத்து தெய்வங்களின் அருள் நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.

அனுமன் சாலீசாவைத் தொடர்ந்து நாம் உச்சரித்தால் நம்மிடைய நிச்சயமாக ஆன்மீக உணர்வு அதிகரிப்பதோடு மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். சனி பகவானின் தொல்லைகள் பனி போல் விலகும். ஆரோக்யமான வாழ்க்கையும், அளவற்ற செல்வமும் பெறலாம்.

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

அனுமனுக்கு வெண்ணெய் சாற்றுவதற்கான காரணம்!

ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை


நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

தசரதன் தெய்வ பிரவியான ராமன் உள்பட 4 பிள்ளைகளை ஏன் பெற்றார் தெரியுமா?

ஒன்பது விதச் செல்வங்களைக் குறிக்கும் ஒன்பது வகை பக்தி

ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 5:59 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை