/* */

நிச்சயம் சுபிட்சம் கிடைக்க, தினமும் காகத்துக்கு உணவு வையுங்க...!

காகத்துக்கு நாம் தினமும் உணவு அளிப்பதன் மூலம் நிச்சயம் சுபிட்சம் கிடைக்கும் என பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நிச்சயம் சுபிட்சம் கிடைக்க,  தினமும் காகத்துக்கு உணவு வையுங்க...!
X

பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஆன்மிகத்தில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வருடத்தில் ஏதாவது ஒரு நாளில் அன்னதானம் செய்வது உண்டு. சிலர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்வர். அன்னதானம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறி உள்ளனர்.

பெரிய அன்னதானம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்தால் அன்னதானம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும் என தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:

பெரிய அளவில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தினமும் காலையில் காகத்துக்கு உணவு அளிக்கலாம். இந்த பரிகாரம் செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும். காகத்திற்கு எப்போது வேண்டுமென்றாலும் உணவு வைக்கலாம். தவறே கிடையாது. இருந்தாலும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு விட்டு, உணவு காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள். இதை தினமும் உங்கள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த உணவை காகம் வந்து எடுத்துச் செல்லும்.

காலை பசியோடு இருக்கும் அந்த காகத்திற்கு நீங்கள் உணவு வைப்பது எவ்வளவு சிறப்பு தெரியுமா?. அந்த காகம் தன்னுடைய குஞ்சுகளை ஏதாவது ஒரு மரத்தின், கூட்டில் வைத்துவிட்டு இரை தேட வந்து இருக்கும். அப்போது நீங்கள் வைக்கும் உணவை கொண்டு போய் அந்த குஞ்சுகளுக்கு கொடுக்கும். பசியோடு இருக்கும் தன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்த உங்களை அப்போது அந்த காகம் எவ்வளவு தூரம் வாழ்த்தும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

உதாரணத்திற்கு நம்முடைய பிள்ளை பசியாக இருக்கிறது. அந்த நேரம் நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அப்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் உங்களுடைய மனது எவ்வளவு குளிரும். அதேபோல் தான் காகத்திற்கும் உணர்வு இருக்கிறது. பெரிய பெரிய அளவில் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட, காலையில் இந்த ஒரு நல்லதை செய்தால் போதும். குடும்பம் சுபிட்சம் பெறும் என பிரத்தியங்கிராதேவி சித்தர் பீடம் நிர்வாகி சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 May 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!