dreams and remedies in tamil -கெட்ட கனவா..? என்ன செய்யவேண்டும்..? தெரிஞ்சுக்கங்க..!
dreams and remedies in tamil -கெட்ட கனவு வந்தால் என்ன செய்யலாம்? அதற்கு ஏதாவது பரிகாரங்கள் உள்ளனவா..? அதையெல்லாம் பார்க்கலாம் வாங்க.
HIGHLIGHTS
மனிதனின் எண்ணங்களின் நிலைக்கு ஏற்பவே கனவுகள் வரும். துன்பத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியான எண்ணங்கள் இருக்காது. அதனால் அவருக்கு கனவிலும் ஏதாவது துன்பம் சார்ந்த கனவுகளே வரும் காரணம் எண்ணங்களின் பிரதிபலிப்பே கனவு.
dreams and remedies in tamil
ஆனால் சாதாரணமாக இருக்கும் ஒருவருக்கு தூங்கும்போது சில நேரங்களில் சில கெட்ட கனவுகள் வரலாம். சிலர் அந்த கனவை மறந்துவிட்டு அடுத்த சோளிக்கு போய்விடுவார்கள். ஆனால் சிலருக்கு அந்த கனவு உறுத்தலாக இருந்து நிம்மதியைப் போக்கும்.
அதனால் எப்படியான கனவு வந்தால் எப்படியான பரிகாரம் செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் வாங்க.
1. கனவில் பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துகள் தொடர்ந்து வந்து நம்மை பயமுறுத்தி கொண்டே இருந்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துகள் தொடர்பான கனவுகள் வராது.
2. நோய், வியாதி சம்பந்தமான கனவுகள் தொடர்ந்து வந்தால் தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபாட்டு வர வேண்டும். இதற்கு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நல்லது.
dreams and remedies in tamil
3. பேய், பிசாசு மற்றும் நம் காரியங்கள் தடைபடுவது போல கனவு வந்தால் விநாயகரை வழிபடவேண்டும். விநாயகனுக்கு அர்ச்சனை செய்து அவரின் அகவலையும் படித்து வந்தால் இது போன்ற கெட்ட கனவுகள் ஓடிவிடும்.
4. பணக் கஷ்டம், பண இழப்பு, பண நஷ்டம் போன்ற கனவுகளை கண்டால் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும்.
5. படிப்பு தடைப்படும்படியான கனவுகளை கண்டால் சரஸ்வதி தேவி மற்றும் ஹயகிரீவர் மந்திரங்களைக் கூறி அவரை வழிபாட்டு வரலாம்.
6. குறிப்பிட்ட தெய்வம் நமது கனவில் அடிக்கடி வந்தால் அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து வந்தால் நமக்குள்ள அனைத்து கஷடங்களும் நீங்கி சுபிட்ஷம் உண்டாகும்.
7. இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்து அழுவது போலவோ அல்லது கனவில் வந்தாலோ பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். சாமிக்கு பொங்கல் வைத்தும் இறந்த நம் முன்னோர்க்கு திதி கொடுத்தும் வழிபட வேண்டும்.
dreams and remedies in tamil
பொதுவாக கெட்ட கனவுகள் காலை நேரங்களில் வந்தால் உடனே எழுந்து குளித்து விட்டு பெருமாளை அல்லது இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து மனமுருக வணங்கவேண்டும். இப்படி வணங்குவதால் நமது மனம் தெளிவடையும். மேலும் கோவிலுக்குச் சென்று ஒரு அர்ச்சனையும் செய்வது நல்லது.
காக்கும் கடவுளான பெருமாளை கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலம் கெட்ட கனவுகளில் இருந்து விடுபடலாம்.
'அச்சுதா.. கேசவா.. விஷ்ணுவே..! சத்ய சங்கல்பரே.. ஜனார்த்தனா.. ஹம்ஸ நாராயணா.. கிருஷ்ணா என்னை காத்தருள வேண்டும்' என்று மனமுருக உச்சரித்து பெருமாளை வணங்க வேண்டும்.