/* */

கனவில் தோட்டம் வந்தால் என்ன பலன்..? தெரிஞ்சுக்கங்க..!

Dream Meaning Tamil-கனவு என்பது, ஆழ்ந்த தூக்கத்தில் மட்டுமே வரும். அப்படி ஆழ்ந்து தூங்கினால் அவர் எந்த துன்பமும் இல்லாமல் இருக்கிறார் என்பது அர்த்தம். உங்களுக்கு எப்படி?

HIGHLIGHTS

Dream Meaning Tamil
X

Dream Meaning Tamil

Dream Meaning Tamil-கனவு என்பது நினைவுகளின் எச்சம் என்று சொல்லலாம். சிலருக்கு சிறு வயதில் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை மூளை பதிவு செய்து வைத்திருக்கும். அந்த நினைவுகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மூளை கனவாக வெளிப்படுத்தும். இன்னும் சிலருக்கு அன்றைய நாளின் நிகழ்வுகளே கனவுகளாக வரும்.

இன்னும் சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் காணும் கனவு அடுத்த நாளில் அது பலிக்கும். உதாரணாமாக முதல் நாள் இரவில் இரண்டு பேருக்கு சண்டை வருவதுபோல கனவு கண்டிருப்பார்கள். அடுத்தநாள் அவர் அந்த சண்டையை நேரில் பார்ப்பார். இப்படி விசித்திரமான கனவுகளும் வருவது உண்டு.

கனவுகள் எந்த ஆய்வுகளுக்கும் உட்படுத்த முடியாத அல்லது விவரிக்கமுடியாத அனுபவங்களை கொண்டிருக்கும். மனிதர்கள் மட்டும் இல்லாமல் விலங்குகளும் கனவு காணுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கனவு என்பது மனிதனுக்கு தூங்கும்போது கிடைத்த இலவச சினிமா. அதில் காதல் வரலாம், சண்டை வரலாம், பாம்பு வரலாம், திடீரென விழுகலாம், பறக்கலாம்.. இப்படி இன்னும் என்னென்னவோ..?? அதுதான் கனவு.

ஆனால் கனவுகளை ஆன்மிகம் வரைமுறைக்குள் கொண்டு வந்துள்ளது. கனவுகளுக்கு சில பலன்களை கூறுகிறது. என்ன வகை கனவு என்ன பலனை தரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் கனவுக்கு பலனை அறிந்து கொள்ளுங்கள்.

கோவிலுக்கு செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டார ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.

கோவிலுக்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பாராத சிக்கல் உண்டு. அதில் அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இறைவனை மனப் பூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்யங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.

திருவிழாவை சுற்றிப் பார்ப்பது போல கனவு கண்டால், வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும் வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே இருக்கும்.

திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு வந்தால், தொழிலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். உறவில் விரிசலோ அல்லது சிறு சிறு சங்கடங்கள் வரலாம். காலம் கடந்து கொண்டு இருந்த சில விஷயங்களுக்கு புதிய வழி பிறக்கும். அதனால் லாபமும் உண்டாகும்.

தோட்டத்தில் இருப்பது போல கனவு கண்டால், இனிமையான தகவல் ஒன்று வரவுள்ளது என்ற பொருளாகும். அதனால் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நட்பால் நன்மை ஏற்படும்.

பட்டுப் போன மரத்தை கனவில் கண்டால், சங்கடமான நிகழ்ச்சிகள் நடக்கும். கடன் கொடுத்தவர்கள் அதிகமாகவே உங்களுக்கு தொல்லையும் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம்.

முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்னையில் இருந்து தப்பித்துவிடுவீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது என்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. புதிய பிரச்னை உருவாகலாம். ஆனாலும், அதிலிருந்து தப்பிக்கும் வழியை தெரிந்து கொள்வீர்கள்.

பூக்களைப் பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம், வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படும். வேலையில் திருப்தியான நிலை இருக்கும். வியாதியால் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல மருத்துவத்தால் உடல் பிரச்னைகள் விலகும்.

கயிற்றை இரு கரங்களால் பிடித்து தொங்குவது போல கனவு கண்டால், விபத்துக்கள் உண்டாகும். ஆகவே பயணம் போகும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. ஆபத்தில் இருந்து உங்களை விடுபட வைக்க சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் வருவார்கள். அவர்களின் வருகை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மேன்மையே ஏற்படுத்தும்.

தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது போல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் நீங்களே எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகளின் தடை விலகி சுப காரியங்கள் நடக்கும்.

நகை வாங்குவது போல கனவு கண்டால், புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது தொழில் விருத்தி உண்டாகும். நற்பலன்கள் தேடி வரும். மனசங்கடங்கள் நீங்கி மன நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும். கடனுக்காக காத்து இருப்பவர்களாக இருந்தால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

Dream Meaning Tamil

நகையை அடமானம் வைப்பது போல கனவு கண்டால், எந்த பொருட்களையாவது விற்பீர்கள். அது அசையும் பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அசையாத பொருட்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கு குறையாது.

நகை திருடு போவது போல கனவு கண்டால், திடீர் தனவரவு உண்டாகும். பாவச் செயலில் ஈடுபடுவீர்கள். தீய சகவாசம் தெருவில் நிறுத்தும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. இறைவனை வணங்கினால் பாதகத்திலிருந்து தப்பிக்கலாம்.

பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்பக் கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் காலம்.

மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலத்தில் சுகம் ஏற்படும்.

மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.

வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு வந்தால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும்.

நெருப்பு உங்களைச் சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்களுக்கு அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் போகும். உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்பவர்கள் இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.

நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே, எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.

இயற்கையாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. முக்கியமாக பேரப் பிள்ளைகளுடன் நன்றாக வாழ்ந்து வயது முதிர்ந்தபின் இயற்கை எய்திய பெரியவர்கள் கனவில் வந்தால் அதனை நமக்கான நல்ல ஆசி எனக் கருத வேண்டும்.

துர்மரணம் அல்லது அகால மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால், சில இன்னல்கள் அல்லது இடர்பாடுகள் வர வாய்ப்பிருக்கிறது. அதாவது உடல் நலக் குறைபாடு, திடீர் விபத்து, குடும்பத்தில் பிரச்னைகள் மற்றும் பிரிவு போன்றவை ஏற்படலாம்.

இப்படி அகாலமாக உயிரிழந்தவர்கள் கனவில் வந்துவிட்டால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று இறை வழிபாட்டை மேற்கொள்ளும் பட்சத்தில் கெட்ட கனவுகளிலிருந்து ஏற்படும் இன்னல்களை தவிர்க்கலாம்.

வயதான முன்னோர்கள் (தாத்தா, பாட்டன், முப்பாட்டன்), வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால், எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை.



மேலும் கனவுகளில் நாம் கோவிலில் கடவுளை வணங்குவது போல் வந்தால், வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல பலன்கள் வந்துசேரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 4 April 2024 7:24 AM GMT

Related News