christian prayer in tamil-இறைவன் நம்மை நெருங்கிவர ஜெபம் செய்வோம்..! எப்படி செய்வது..? அறிவோமா..?

christian prayer in tamil-ஜெபம் ஏன் செய்யவேண்டும்? இறைவனையும் நம்மையும் இணைக்கும் பாலம்தான் ஜெபம். ஆதலால், ஜெபம் செய்வோம் வாருங்கள்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
christian prayer in tamil-இறைவன் நம்மை நெருங்கிவர ஜெபம் செய்வோம்..! எப்படி செய்வது..? அறிவோமா..?
X

christian prayer in tamil-கிறிஸ்தவ பிரார்த்தனை (கோப்பு படம்)

ஜெபம் என்பது என்ன?

பரலோகத்தில் இருக்கும் கடவுளோடு மனதால் உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பரிடம் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களைப் போல நாம் நமது துன்பங்கள், வலிகள், அதற்கான விமோசனகள் போன்றவைகளை பகிர்ந்துகொள்வது ஜெபம். அந்த ஜெபத்தை ஏற்று ஆண்டவன் நமக்கான நல்லதை செய்வான் என்ற நம்பிக்கை, நம் வாழ்க்கையை செழிக்கச் செய்கிறது. நமது வாழ்க்கையைப் பற்றி கடவுள் அறிந்திருந்தாலும், அதற்கான தீர்வு கேட்டு மன்றாடுவது ஜெபம். மனம் விட்டு இறைவனோடு பேசுவது ஜெபம்.


christian prayer in tamil

ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

கடவுளையும் நம்மையும் நெருங்கி வரச் செய்வது ஜெபம். நமது அழைப்பு கடவுளின் காதுகளுக்குக் கேட்டு நம்மை நோக்கி நெருங்கி வருவார். அதற்கு நமது ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. ஏற்கனவே கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார்.

ஜெபம் வேத வசனங்கள்

யோபு 22:21

நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.

christian prayer in tamil

எசேக்கியேல் 36:37

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.


யோபு 33:26

அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

யோவேல் 2:32

அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

சங்கீதம் 6:9

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

christian prayer in tamil


ரோமர் 10:12

யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.

சங்கீதம் 10:17

கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.

ரோமர் 10:13

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

சங்கீதம் 18:3

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.

christian prayer in tamil

படம் : நன்றி- விக்கிப்பீடியா

எபிரெயர் 4:14

வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.

சங்கீதம் 55:17

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.

எபிரெயர் 4:16

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

சங்கீதம் 73:28

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

யாக்கோபு 4:8

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

christian prayer in tamil


சங்கீதம் 86:5

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

சங்கீதம் 86:7

நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

யாத்திராகமம் 34:24

நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.

christian prayer in tamil

சங்கீதம் 145:18

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


உபாகமம் 4:7

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

எரேமியா 33:3

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

Updated On: 26 May 2023 1:47 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
  2. சினிமா
    Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
  3. சினிமா
    காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு?
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
  6. சினிமா
    Madhavan birthday celebration special today- இன்று பிறந்த நாள்...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும்...
  8. நாமக்கல்
    பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர்...
  9. நாமக்கல்
    மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு
  10. லைஃப்ஸ்டைல்
    ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...