/* */

ஆசீர்வதிக்கும் பைபிள் வசனங்கள்..! ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு..!

Blessing Promise Bible Verses in Tamil-பைபிள் வசனங்கள் படிப்பவருக்கு மனதிலே பெலனைத் தருகிறது. நம்பிக்கையை ஊட்டுகிறது. அதன்மூலம் ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதங்கள் கிட்டும்.

HIGHLIGHTS

ஆசீர்வதிக்கும் பைபிள் வசனங்கள்..! ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு..!
X

Blessing Promise Bible Verses in Tamil-கடவுள் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆனால், எங்கள் துன்மார்க்கத்தின் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் அவருடைய ஆசீர்வாதங்களை இழக்கிறோம். நாம் தினமும் பயன்படுத்தும் இயற்கை விஷயங்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஆசீர்வாதம். அதை நாம் நேர்வழியில் பயன்படுத்துவது ஆண்டவனுக்கு செய்யும் உதவி. ஆண்டவர் நம்மை ரட்சித்து ஆசீர்வதிப்பார்.

  • சிறுமை பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர். கஷ்டப்படுகின்ற காலங்களில் அவரே தஞ்சமானவர். – சங்கீதம் 9:9
  • உன் பிள்ளைகள் எல்லோரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்.உனது பிள்ளைகளின் சமாதானம் பெரிதாக இருக்கும். – ஏசாயா 54:13
  • நீ தீமையினால் வெல்லப்படாமல் தீமையை நன்மையால் வெல்லு. – ரோமர் 12:21
  • நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம் ஒருவனும் உன் முன்பு எதிர்த்து நிற்பதில்லைனு. – யோசு 1:5
  • ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான் கால்களை போல் ஆக்கி உயரமான இடங்களில் நடக்க வைப்பார். – ஆபகூக் 3:19
  • கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய் நான் உன்னை தப்புவித்தேன். – சங்கீதம் 81:7
  • தேவன் உங்களை விசாரிக்கிறவர் அதனால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். – பேதரு 5:7
  • கர்த்தரின் கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது. – சங்கீதம் 34 :15
  • இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். – மத்தேயு 5:8
  • நீங்கள் திடமானதாயிருந்து காரியங்களை நடத்துங்கள் உத்தமனுக்கு கர்த்தர் துணை என்றான். – 2 நாளாகமம் 19:11
  • அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் – பிரசங்கி 3:11
  • நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். – யோவான் 14:15
  • அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். – சங்கீதம் 30:5
  • நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். – சங்கீதம் 32:8
  • சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். – சங்கீதம் 37:11
  • "கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காப்பாற்றுவாராக. கர்த்தர் உன்னிடம் நல்லவராக இருந்து அவர் உனக்குக் கருணை காட்டுவாராக. உனது ஜெபங்களுக்கு கர்த்தர் பதில் தருவாராக! அவர் உனக்குச் சமாதானத்தைத் தருவாராக.' என்று சொல்லுங்கள்' என்றார்" -எண்ணாகமம் 6:24-26
  • "அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும்" -2 கொரி 9:8
  • "இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார்"- பிலிப்பியர் 4:19
  • "தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும் மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும்" -ரோமர் 15:13
  • "கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக்கொண்டுவரும். அது துன்பத்தைக்கொண்டு வராது" -நீதிமொழிகள் 10:22
  • "எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்"-யாக்கோபு 1:17-18
  • "அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம்"-யோவான் 1:16
  • "நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். 'எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்"-எரேமியா 7:23
  • "இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்"-உபாகமம் 28:1-2
  • "சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான்"-யாக்கோபு 1:12
  • "தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்"-சங்கீதம் 67:7
  • "கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்"-சங்கீதம் 3:8
  • "நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப்பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்"-நீதிமொழிகள் 10:6
  • "ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது" -1 கொரி 15:10
  • "அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும்"-எபிரேயர் 6:௭


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...