/* */

2022ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2022 rasi palan in tamil-2022ம் ஆண்டுக்கான முழு ஆண்டு ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கும் இங்கு தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

2022ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்கள்
X

2022 rasi palan in tamil-பனிரெண்டு ராசிகள்.(மாதிரி படம்)

2022 rasi palan in tamil-2022-ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி முதல் டிசம்பர் 2022 வரை ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பலன்கள் தரப்பட்டுள்ளன.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 2022ம் வருடம் தன காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மேலும் சனி பகவான் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் உங்கள் முயற்சிக்கு நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த ஆண்டு எதிர்காலத்தைப் பற்றி சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீண்ட நாள் கனவை நினைவாக்க முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி வரும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

முக்கிய காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பின் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகை பரிமாறுவது நல்லதல்ல. இந்த ஆண்டு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதில் எழும் எண்ணங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும்.

புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படவும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்யலாம். உடல் இருந்த சோர்வு, குழப்பம் மறையும். பிரியமானவர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பெற்றோர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளவும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சுப செலவுகள் அதிகளவில் ஏற்படும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள புது வழியை தேடிக்கொள்ளவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் நலனில் அதிக கவனம் தேவை.

உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். சொந்தவீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும்.இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. இந்த புத்தாண்டு எல்லா வகையிலும் நற்பலன்கள் அள்ளித்தரும்.

பரிகாரம் : செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.

............................................................................................................................................................................................................

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு , இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 10-ம் வீட்டிலும், சனி பகவான் 9-ம் சஞ்சரித்துள்ளதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். இந்த புத்தாண்டு நிச்சயம் நல்லதும், கெட்டதும் கலந்த ஆண்டாக இருக்கும். எல்லாம் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. உங்களுக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் உரிய நேரத்தில் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற முடியும். பொருள் செல்வம் உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்கனும் . முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுக்க முடியும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை நிலவும்.

2022 rasi palan in tamil-திருமண முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சென்ற ஆண்டு பட்ட கஷ்டத்தை இந்த ஆண்டு சரி படுத்திக்கொள்ள முடியும். மனம் சந்தோஷமாக இருக்க பணம் நிறைய செலவு செய்ய வேண்டிவரும். பண விஷயத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். வந்த கஷ்டங்கள் கூட பனிப்போல விலகும். மற்றவர்கள் உங்கள் மீது சுமத்தும் பழிச் சொல்லை பொருட்படுத்த வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து ஏற்கெனவே செய்துவரும் சொந்த வேலைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவது நல்லது.

அடுத்தவர்களை நம்புவதை விட நீங்களே நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கடைப்பிடிக்கவும். வீண் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். பொருள் வரவு அதிகமாகும். முன்பு பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல் குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த வழிபாட்டை உரிய நேரத்தில் செய்ய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த பகைமை மாறும்.

புது பொருட்களையும், அசையும், ஆசையா புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். உற்றார், உறவினர்களால் ஒரு சில சிக்கல்கள் வரக்கூடும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் ஒன்று சேருவர். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறைமுக எதிரிகளால் ஒரு சில தொந்தரவு ஏற்படும். நெருங்கிய உறவினர்கள் கூட பகைமை பாராட்டுவர். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி ஜெயிக்க முடியும். பல பெரிய மனிதர்களின் நட்பு நம்பிக்கை அளிப்பதாக அமையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். பல நல்ல வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். இனி எல்லாம் நல்ல காலம் தான் என்கின்ற மன உறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.

.........................................................................................................................................................................................................

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களுக்கு, இந்த 2022ம் வருடம் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுகிறது. இதனால் எந்த இரு விஷயத்திலும் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். எதையும் தைரியத்தோடு செய்யும் துணிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் தாராளமாக மேற்கொள்ளலாம். அஷ்ட சனியின் பிடியில் இருப்பதால் மனதில் ஒரு வித பயம் இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்புகள் ஏதும் வர வாய்ப்பில்லை.

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் நிலை உருவாகும். வீண் கோபத்தை குறைப்பது பல நன்மைகளை உண்டாக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும்.

அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுயஅறிவே பயன்படுத்துவதால் பல இடங்களில் வெற்றி பெற முடியும். ஆன்மீக பணிகளுக்காக நிறைய செய்ய வேண்டிவரும். குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்ல வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வரலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். யாருக்கும் வாக்கு தர வேண்டாமாம் பணவரவு சிறிது குறைவாக இருந்தாலும் குடும்பத் தேவைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கடன் தொல்லைகள் ஏற்படாது.

சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் வரும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். நவீன பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவேண்டும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும்.

குடும்பத்தில் இதுவரை தடைபட்டுவந்த சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். புதிய வேலைக்கு மாறுவது தொடர்பான யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் அணுகுமுறையால் பல வெற்றிகளை பெறலாம்.

பரிகாரம் : இந்த வருடத்தின் வியாழக்கிழமைகளில் லக்ஷ்மி நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பைத்தரும்.

............................................................................................................................................................................................................

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியம். மேலும் ஒரு ராசியில் அதிக நாட்கள் தாங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் நெருக்கமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப நபர்களிடம் அனுசரித்து போகவும். பெரிய பெரிய காரியங்களை கூட சர்வ சாதாரணமாக செய்ய முடியும். மனதில் நினைத்த காரியம் ஒரு சில தடங்கலுக்கு பின் கைகூடும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வரும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள முடியும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைவர். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

2022 rasi palan in tamil-அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் தேவை. பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை பார்க்க வேண்டிவரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். பிரியமானவர்களுக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை ஏற்படும். உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்த தொகை சரியான நேரத்தில் கைக்கு வரும். பழைய கடன் முழுவதும் அடைப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். அப்படி கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும்.

பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் ஏற்படும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களால் நன்மைகள் உண்டாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம் : பெண் தெய்வ வழிபாடு சிறப்பான பலன் தரும்.

........................................................................................................................................................................................................

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 7-ம் வீட்டிலும், சனி பகவான் 6-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெற முடியும். இந்த ஆண்டு எதிலும் தைரியதுடன் செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங்களை பெற முடியும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வரவு செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். குடும்ப நலனில் அக்கறை தேவை. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும்.

வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடந்த ஆண்டு நடக்காமல் இருந்த முக்கிய காரியங்கள் இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இருக்காது.

பிரியமானவர்கள் உதவியாய் இருப்பர். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்களாகவர். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்கை தரம் உயரும். மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். பயணங்களால் அலைச்சல் கூடும்.

முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். ஏற்கனவே முடிவு செய்த திருமண ஏற்பாடுகள் இந்த வருடம் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.

பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் சூரிய நமஸ்காரம் மற்றும் சூரிய பகவானை வழிபடுவது சிறப்பு.

...........................................................................................................................................................................................................

கன்னி

2022 rasi palan in tamil-கன்னி ராசிக்காரர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 6-ம் வீட்டிலும், சனி பகவான் 5-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். இந்த புத்தாண்டு சாதகமான பலனை தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நாளடைவில் நடந்து விடும். மனோபலம் கூடும். நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிப்படையாகப் பேசுவதை தவிர்க்கவும். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். பிரியமானவர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். புது வங்கி கணக்கு ஒன்றை தொடங்க முடியும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர்.

மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையை அளந்து பேசவும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது. எப்போதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும். உத்யோகத்தில் இருந்த சிக்கல் நீங்கும். உத்யோகத்தில் ஏற்றமான விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது நபர்களை சந்திக்க நேரிடும். உங்கள் கடுமையான உழைப்பால் இந்த புத்தாண்டில் பல சாதனைகளை படைக்க முடியும்.

பரிகாரம்: திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடுவது சிறப்பு

..............................................................................................................................................................................................................

துலாம்

துலாம் ராசிகாரர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 5-ம் வீட்டிலும், சனி பகவான் 4-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையையும் வல்லமையும் உண்டாகும். இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமையும். பொருளாதார நிலை உயரும். இதுவரை இருந்து வந்த தொல்லைகள், கஷ்டங்கள், கடன்சுமைகள் எல்லாம் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும்.

தெய்வ சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் எண்ணம் வரும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும்.

2022 rasi palan in tamil-உத்யோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும்.பெற்றோர்கள் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். அடிக்கடி பயணம் செல்ல வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடி ஏறும் வாய்ப்பு வரும்.

பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.யாரிடமும் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். குழந்தை இல்லாதவர்களுக்கு தெய்வ அனுக்கிரகத்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்துடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரத்தில் உள்ள சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவது நல்லது.

.............................................................................................................................................................................................................

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் 3-ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றியம், எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்தில் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய முடியும். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது.

எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். மனக்குழப்பம் நீங்கி தெளிவு நிலை உண்டாகும். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். பிரியமானவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த புத்தாண்டு முதல் வந்த தடைகள் எல்லாம் விலக போகிறது. புதிய பாதையில் பயணிக்க தொடங்கவும். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக எடுத்து செய்வீர்கள்.

2022 rasi palan in tamil-உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதால் நன்மை உண்டாகும். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை பெற முடியும். அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவை விட செலவுகள் அதிகளவில் இருக்கும். சொத்துப் பிரச்னைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களின் வழியில் பொருள் விரையம் ஏற்படும். வாகனங்களில் இயக்கும்போது அதிக கவனம் தேவை. நண்பர்களிடம் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பண வரவில் ஏற்ற தாழ்வு இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளர்வர்களின் தொடர்பு கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். புண்ணிய ஸ்தங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். திட்டமிட்ட பயணங்கள் ஓரளவு நன்மையை தரும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். ப்ரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சுப காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு காரியத்திலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும்.உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும்.

பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

..............................................................................................................................................................................................................

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இந்த 2022ம் வருடம் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனிபகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதசசனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மேலும் குரு பகவான் 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாள் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். அலைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உங்கள் மதிப்பு மரியாதையை உயர்த்திக்கொள்ள இந்த ஆண்டு வழி பிறக்கும். நீங்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து காட்ட முடியும். இனி வரும் காலங்கள் சாதகமாகவே இருக்கும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கணவன், மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவும் காணப்படும். நீண்ட நாட்களாகத் தள்ளி வைத்திருந்த பயணங்கள் கைகூடும். உங்கள் காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்ய முடியும். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவர்.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உற்றார், உறவினர்களுக்கு நன்மைகளும் நலன்களும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் வருமானம் கிடைக்கும்.குடும்பத்தி உங்கள் கௌரவம் உயருகின்ற வகையில் சம்பவங்கள் நிகழும்.

2022 rasi palan in tamil-நல்ல வாய்ப்புகள் வரும்போதே நன்கு பயன்படுத்திக்கொள்ளவும். அவசரப்பட்டு செய்ய நினைக்கும் காரியங்கள் சில நேரங்களில் சிரமத்தில் முடியும். பயணங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரம் உயரும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வை காண முடியும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவர். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும்.

வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சாட்சி கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பணிச் சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் சில இடர்பாடுகள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகள் நீங்கும். இந்த வருடம் உங்கள் ராசிக்குரிய எளிய பரிகாரங்கள் செய்து வந்தால் நலம் மிக்க ஆண்டாக அமையும்.

பரிகாரம் : வியாழக்கிழமையில் சித்தர்கள் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

............................................................................................................................................................................................................

மகரம்

மகர ராசிக்காரர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைசனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசி அதிபதி என்பதால் அதிக கெடுதலை செய்யமாட்டார். எதிலும் நிதானமாக செயல்பட்டால் தேவைகளை பூர்த்திசெய்து வாழ்வில் ஏற்றங்களை அடைய முடியும். குடும்ப நபர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். இது வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும்.

இந்த புத்தாண்டு ஏழரை சனியோடு தொடங்குகிறதே என்ற அச்சம் வேண்டாம். நீங்கள் கடுமையான உழைப்பாளி என்று அனைவரும் அறிந்த ஒன்று. முன்பு இருந்ததை விட இப்போது கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். இந்த ஆண்டு நீங்கள் எடுத்து வைக்க போகும் ஒவ்வொரு அடியும் உங்கள் எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக இருக்கும். எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.வெளியில் கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த காரியங்கள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உத்யோகத்தில் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு நிறைய அலைச்சலை சந்திக்க நேரிடும்.

2022 rasi palan in tamil-குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வரும். இக்கட்டான நேரத்தில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வேண்டியவர்கள் உதவி செய்ய தயாராக இருப்பர். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக ஏற்படும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம், அதனால் பல சிக்கல் வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். தெய்வ பலத்தால் அனைத்தும் சுலபமாக கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

பரிகாரம் : சாஸ்தாவை வணங்குதல் சிறப்பைத்தரும்.

............................................................................................................................................................................................................

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இந்த 2022ம் வருடம் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பதும், சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படவும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். குடும்ப தேவைகள் அதிகமாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். இந்த புத்தாண்டு எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும். மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்ளும்படி இருக்கும். மனதினில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும்.

2022 rasi palan in tamil-எங்கே, எப்படி நடந்து கொள்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் ஜெயிக்க முடியும். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம், கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம், நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன் - மனைவிக்குல நல்ல அனுசரணை இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு வெகுவாக உயரும். குடும்ப செல்வாக்கு உயரத் தொடங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். வழக்குகளில் சாதகமான நிலை இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நட்பு வட்டாரத்தால் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குறிப்பாக சுப செலவுகள் அதிகளவில் உண்டு. தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புது வீடு மனை வாங்கும் திட்டம் கைகூடும். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாக தொடங்கும். தெய்வ வழிபாட்டில் நாட்டம் உண்டாகும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர்.

ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் பூர்வவீக இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல நேரிடும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மனக்குழப்பம் ஏதும் வராமல் இருக்க தினமும் தியானம் செய்யவும்.உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

பரிகாரம் : கால பைரவரை வணங்குவது கஷ்டங்கள் தீர வழிவகுக்கும்.

............................................................................................................................................................................................................

மீனம்

மீன ராசிகாரர்களே, இந்த 2022ம் வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஆதாயம் உண்டு. உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனி பகவான் இந்த ஆண்டு நல்ல பலன் தருவதுடன் பல வழிகளில் வருமானத்தை அதிகரிக்கவும் செய்வார். குரு பகவான் 12-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நன்மையை தரும். இந்த ஆண்டு விடியல் தர போகும் ஆண்டாக இருக்கும்.

2022 rasi palan in tamil-தெய்வ அருள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் இந்த ஆண்டு நிறைய சாதிக்க முடியும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது நஷ்டங்களும் ஏற்படும். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். பிரியமானவர்கள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள வழி வகை செய்துகொள்ளவும். உங்களுக்குத் தெரியாத விவகாரங்களில் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. நண்பர்களுக்காக உதவப்போய் முக்கியமான நபர்களைப் பகைத்துக் கொள்ள நேரிடும். புதிய சொத்துக்கள், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதார வளம் கூடும்.

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருந்தாலும் சேமிக்க முடியாமல் போகும். சொத்து விவகாரங்களில் விட்டு கொடுத்து போவது நல்லது. சொந்த வீடு வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும். மற்றவர்கள் உங்களை மதிக்கும் படி நடந்துகொள்ளவும். எப்போதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க விருப்பம் ஏற்படும். திருமணம் வரம் தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புது மன தம்பதியர்களுக்கு சீக்கிரத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும். வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும், உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

பரிகாரம் : விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது சிறப்பைத் தரும்.

Updated On: 21 July 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க