/* */

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: மறுபரிசீலனை செய்ய விஜயகாந்த் கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள்‌ ஒதுக்கீடு ரத்து செய்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு, விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

HIGHLIGHTS

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: மறுபரிசீலனை செய்ய விஜயகாந்த் கோரிக்கை
X

விஜயகாந்த்

இதுகுறித்து, தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளர்‌ விஜயகாந்த்‌ இன்று வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது: மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, அதிமுக அரசு சட்டம்‌ இயற்றியது.

எனினும், இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பிறகே, இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக்கூறி, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.

தேர்தலுக்காகவும்‌, கூட்டணிக்காகவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது, வன்னிய சமூக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இடஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை, நீதிமன்றம் மறுபரீசிலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On: 2 Nov 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!