/* */

‘பெண்களின் வங்கி கணக்கிற்கே ரூ.1000 உதவி தொகை’- ஸ்டாலின் அறிவிப்பு

‘பெண்களின் வங்கி கணக்கிற்கே ரூ.1000 உதவி தொகை’- வழங்கப்படும் என சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

HIGHLIGHTS

‘பெண்களின் வங்கி கணக்கிற்கே ரூ.1000 உதவி தொகை’- ஸ்டாலின் அறிவிப்பு
X

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட காட்சி.

மாதம் ரூ.1000 உதவி தொகை பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாக்குறுதி மட்டும் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கான உரிமை தொகை செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. உதவி பெறும் பெண்களின் தகுதியை எப்படி கண்டறிவது என பல கேள்விகள் இதில் எழுந்தன.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . அப்போது அவர் கூறியதாவது:-

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ஒரு நீண்ட விளக்கத்தை தர விரும்புகிறேன், தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதுதேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் வலிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறதுசமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார்.

நீதிக்கட்சி முதலே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 7000 கோடி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள்

மேலும், உரிமை தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமை திட்டம்.பெண்களின் வங்கி கணக்கிற்கே மகளிர் உரிமைதொகை செலுத்தப்படும்.

மேலும், மீனவ பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டிடப் பணியாளர்கள் , சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் என பலரும் இந்த திட்டத்தில் பயனடைவர்.

இவ்வாறு அவர் கூறினார்

Updated On: 28 March 2023 5:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  6. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  7. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  9. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  10. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...