/* */

எங்களின் ஒரு நாள் ஊதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்-அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதலமைச்சருக்கு வேண்டுகோள்

எங்களின் ஒரு நாள் ஊதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்-அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதலமைச்சருக்கு வேண்டுகோள்
X

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்வருக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதனால் பாதிப்புகள் உச்ச அளவில் பதிவாகியது. தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்காக அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறது. தடுப்பூசி, சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கும் அதிக அளவிலான தொகை செலவிடுகிறது.

இதனால் முதல்வர் கொரோனா நிவாரண தொகை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று பல தரப்புகளில் இருந்தும் தங்களால் இயன்ற நிவாரணத் தொகை வழங்கிவந்தனர். கடந்த மாதம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மே மாத ஊதியத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக பிடித்துக் கொள்ளுமாறு அறிவித்தனர். தற்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா. அருணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சிறந்த முறையில் செய்து வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள். கடந்த மாதம் முதல்வரின் நிவாரண நிதிக்கு எங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதேபோல், தற்போதும் கொரோனா தடுப்பு பணிக்கு நிதி தேவையாக உள்ள சூழல் நிலவுவதால், ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்ளுமாறு முதலவரிடம் கேட்டுக் கொள்கிறோம். மேலும், அதனை கொரோனா நிவாரண நிதியாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Jun 2021 1:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...