/* */

நீதிக்கட்சி முன்னோடி திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நினைவு நாள்

திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.வழக்குரைஞராக இருந்தார்.நீதிக்கட்சி சார்பில் சட்ட மன்ற மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.

HIGHLIGHTS

நீதிக்கட்சி முன்னோடி திவான் பகதூர் தணிகாசலம் செட்டியார் நினைவு நாள்
X

திவான் பகதூர் தணிகாசலம்

திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் காலமான நாளின்று

திவான் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார் நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர். வழக்குரைஞராக இருந்தார். பேச்சாற்றலும் வாதத் திறமையும் கொண்டவர். நீதிக்கட்சி சார்பில் சட்ட மன்ற மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார்.

1919 இல் சென்னை மாநகராட்சிக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1925 இல் சென்னை மாநகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்தக் காலத்தில் நடந்த பிராமணரால்லாத மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டும் தலைமையேற்றும் செயல்பட்டார். நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி தியாகராயரோடு இணைந்து பணியாற்றினார்.

அரசுப் பணியிடங்களைச் சமூக விகிதாச்சாரப்படி நிரப்பிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் ஓ. தணிகாசலம் சென்னை சட்ட மன்ற மேலவையில் தீர்மானங்கள் கொண்டுவந்தார். அவைதான் பிற்காலத்தில் 1928 ஆம் ஆண்டில் எஸ் முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்பு வாரி ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

நீதித் துறையில் முனிசீப் நியமன அதிகாரத்தை அரசே ஏற்று செயல்படுத்தவேண்டும் என்று 1921 ஆம் ஆண்டில் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னையில் தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெருவுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 July 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை