/* */

காவல்துறை விருப்பங்களை திமுக நிறைவேற்றும்-பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர்

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா-முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

காவல்துறை விருப்பங்களை திமுக நிறைவேற்றும்-பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர்
X

தமிழ்நாடு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது அவர் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் திறமைகளை மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும்.மற்ற குற்றங்களை விட தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.நவீன வழிமுறைகளை கண்டறிந்து சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும். காவல்துறையின் விருப்பங்களை திமுக நிறைவேற்றும்.என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழா சென்னை வண்டலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், 40 பெண்கள், 46 ஆண்கள் என 86 டிஎஸ்பிக்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதன்பின் இவ்விழாவில் பேசிய முதல்வர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டபோது எனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது. மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள எத்தனையோ துறைகளில் காவல்துறையும் ஒன்று என நீங்கள் நினைக்கக்கூடாது. அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதித்தான். அந்த பொறுப்பு காவல்துறைக்கு தான் உள்ளது. அனைத்தையும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முகமற்ற குற்றாவளிகள் பெருகிவிட்டன. இணையவழி மூலம் பாலியல், நிதி சார்ந்த குற்றங்கள் தற்போது அதிகமாகி வருகிறது.

சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழிநுட்பங்களை காவல்துறை தெரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை மாறவேண்டும் என்றும் புதிதாக பொறுப்பேற்கும் காவலர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டிருந்தால் வழிப்பறி திருடன் என்பதை போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இப்பொழுது இணைய வசதி வந்தபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இதனை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 29 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  3. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  7. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  9. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  10. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e