/* */

இதுதாங்க ஜனநாயகம்: ஊராட்சித்தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று பதவி ஏற்றார்.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் ஆகியோர், இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக, நெல்லையை சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள், இன்று பதவி ஏற்றார். தேர்தலில், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட, 90 வயது மூதாட்டி பெருமாத்தாள், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.

அவருக்கு மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று பெருமாத்தாள் வெற்றி பெற்றார். அடுத்தபடியாக செல்வராணி 440 வாக்குகளும், அதற்கு அடுத்தவர் உமா என்பவர் 72 வாக்குகளும் பெற்றார். 90-வயது மூதாட்டியின் வெற்றி, இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

அனுபவம் பேசுகிறது: தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய பெருமாத்தாள்.

தனது வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. எனக்கு தற்போது 90 வயதாகிறது. ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் வெற்றி பெற்றுள்ளனர். நான் தற்போதுதான், முதல்முறையாக நின்று, வெற்றி பெற்றுள்ளேன். ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Updated On: 20 Oct 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்