/* */

மனித வாழ்க்கையின் பாசிடிவ் 3 எழுத்து மந்திரங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?:பாகம் -1

மனித வாழ்க்கையின் முக்கிய நேர்மறையான 3 எழுத்து மந்திரங்கள் பற்றி பார்ப்போம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அவையாவன.

HIGHLIGHTS

மனித வாழ்வின் பாசிடிவ் 3 எழுத்து

மந்திரங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

இறைவனின் படைப்பில் ஆறறிவால் படைக்கப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமே. மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் ஐந்தறிவுதான். அந்த வகையில் பேச்சு, சிரிப்பு என பல வித பரிமாண குணங்களைக் கொண்டவர்களாக மனித இனம் படைக்கப்பட்டது. மனித வாழ்க்கையே பிரச்னைகள் அடங்கியதுதான். வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு மலைத்து போய்விடக்கூடாது. அதனை சவாலுடன் எதிர்கொள்ளவேண்டும். அதனைவிடுத்து விபரீத எண்ணங்களால் வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... என்ற பாடல் வரிகளை மனதில் கொண்டு நம் அன்றாட செயல்களில் சிறிதளவும் உற்சாக குறைவின்றி செயல்படுவது அவசியம். முடிந்த வரை காலையில் புத்துணர்ச்சியோடு அன்றைய தினத்தினை துவக்குங்கள்.அன்று நாள் முழுவதும் நல்லதே நடக்கும். மனித வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொள்ளும் முக்கிய மூன்றெழுத்து மந்திரங்களை மட்டும் பார்க்கலாம். இதனை சாதக ,பாதகம் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அந்த வகையில் சாதக அம்சங்கள் கொண்ட மூன்றெழுத்து மந்திரங்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

உயிர்

மனிதன் வாழ அவசியம் ேதவைப்படுவது உயிர். இந்த உயிரை உருவாக்க 1௦ மாதம் சுமந்து பின் பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து ஆளாக்கி கடைசியில் அவர்களின் இன்ப வாழ்க்கையினை காண்பவர்கள் பெற்றோர்கள். இக்காலத்தில் உண்மையான அன்பு மறைந்து போலி பாசம் உருவெடுத்துவிட்டது. அந்த உயிரை துச்சமென மதித்து பல்வேறு சம்பவங்கள் நடப்பதால் சமூகம் எதனை நோக்கி போய்கொண்டிருக்கிறது என அச்சப்படவேண்டியுள்ளது. ஒரு சாராருக்கு குழந்தை செல்வம் என்ற பாக்கியம் கிட்டாநிலை.கிடைத்தவர்களுக்கோ அது ஒரு வகையில் கஷ்டமான நிலை. அந்த வகையில் நாம் வாழ அவசியம் தேவை உயிர். அது இருந்தால் மட்டுமே நமக்கு எல்லாமே.

அன்பு

அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரத்தால் பலரையும் நாம் கவரலாம். ஆனால் உண்மையான அன்பினை செலுத்துதல் அவசியம். அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் காட்டிய அன்பு கூட்டுக்குடும்பத்தில் சொல்லவே தேவையில்லை.அந்த வகையில் அதுதான் உண்மையான அன்பாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் நடக்கும் தனிக்குடித்தனத்தில் அன்பு இருந்தாலும் நடக்கும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது அது ஆத்மார்த்தமானதா என எண்ண தோன்றுகிறது.

பாசம்

பாசம் அன்பின் மறு உருவம்தான். பெற்ற பிள்ளைகள் மீது பெற்றோர்கள் காட்டும் பாசம் அவர்கள் இருக்கும் வரை வீழ்வதில்லை. பிள்ளைகள் என்னதான் கஷ்டத்தினை தந்தாலும் அது அவர்களின் மனதில் வைத்து பூட்டிக்கொள்வார்களே தவிர வெளியில் சொல்லமாட்டார்கள். அதுவே உண்மையான பாசம். ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் இநத் பாசமே வேஷமாகிவிடுவதுதான் மிகப் பெரும்வேதனை. போலி பாசத்தினால் கஷ்டப்படுபவர்கள் இந்நாட்டில் எத்தனைபேர்? ஏமாந்துள்ளது மிகப்பெரிய கதையாக கூட இதனைசொல்லலாம்.

கல்வி

பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கை விடாது. அந்த வகையில் ஒருவன் கற்ற கல்வி அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு பயனைத் தரும். இதனால்தான் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் கல்வியை கற்காவிடினும் தங்களுடைய குழந்தைகளுக்காகவாவது எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து கடன் பட்டு கல்விச் செல்வத்தினை பிள்ளைகளுக்கு தருகின்றனர். இதில் ஒரு சில பிள்ளைகள் பெற்றோரை இறுதி வரை நன்கு பராமரித்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்கின்றனர். ஆனால் ஒரு சிலரோ சொல்லவே தேவையில்லை.

தொழில்

உத்யோகம் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள் அக்காலத்தில். அதுபோல் என்னதான் படித்தாலும் நல்ல வேலை அமைய வேண்டும் என்பது பலரின் பிரார்த்தனையும் கூட. அந்த வகையில் பலர் நல்ல படிப்பு படித்திருந்தாலும் நல்ல வேலைகிடைக்காததால் இன்று வரை கஷ்டப்படுகின்றனர். படிக்கும் காலத்திலேயே கொஞ்சம் கஷ்டப்பட்டு படிப்பவர்கள் வாழ்க்கையில் நல்ல பதவியில் அமர்ந்து ஜெயித்து காட்டுகிறார்கள். அதுவே படிக்கும்காலத்தில் நன்கு படிக்காதவர்கள் நல்ல வேலை கிடைக்காமல் வாழ்க்கையினை இறுதி வரை தேடிக்கொண்டிருப்பதில் செலவிடுகின்றனர்.

உண்மை

உண்மை என்றும் எப்போதும் நம்முடன் இருந்தால் அதற்கான மதிப்பே தனி. பல வருடங்களுக்கு முன்பு வரை அனைத்து செயல்பாடுகளிலும் உண்மை மிகுந்திருந்தது. இன்று கூட வாழ்க்கையில் உண்மை பேசுபவர்கள் இருந்ததற்கான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறுதி வரை வாழ்ந்து மடிந்தவர்கள் பலர். உண்மை எப்போதும் தோற்பதில்லை. ஆகவே முடிந்தவரை உண்மையாயிருங்கள். வாழ்க்கையில் அத்தனை செயல்பாடுகளிலும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள். உண்மைக்கே அதிக ஆயுள், போலிகளுக்கு குறைந்த பட்ச ஆயுள்தான்.

பண்பு

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பண்புகளில் சிறந்துவிளங்குபவர்களாக இருக்க வேண்டும். பண்பு என்பதனை ஒரே நாளில் கற்றுவிட முடியாது. அனுபவங்கள்தான் நமக்கு பண்புகளைக் கற்றுக்கொடுக்கின்றன. தாய், தந்தை, மற்றும்குடும்ப உறவுகளின் மூலம் நாம் அன்றாடம் பல பண்புகளை பெற்று வருகிறோம். ஏன்? நமக்கு முன்னால் வாழ்ந்த மூதாதையர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொண்டது ஏராளம்.

திறமை

திறமையிருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு திறமைக்கு மதிப்புண்டு . இவ்வுலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர்கள் அவர்களின் திறமையால்தான் சென்றுள்ளனர் என்பதே இதற்கு உதாரணம். அந்த வகையில் திறமை உள்ளவர்களுக்கு எந்நாளும் கதவுகள் திறந்துதான் இருக்கும். எனவே முடிந்தவரை தனிநபர்கள் யாராக இருந்தாலும் சரி உங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள். உங்கள் வாழ்க்கையினை.

பரிசு

வாழ்க்கையில் பரிசு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பரிசுகளில் பல வகையுண்டு. தம் திறமையால் வாங்குவது ,முக்கிய நாட்களில் மற்றவர்களினால் அளிக்கப்படுவது, பிறந்த நாள் மற்றும் வாழ்வின் முக்கிய தருணங்களில் மற்றவர்கள் வழங்குவது,எனப்படும். இதில் தம் திறமையால் வாங்கப்படும் பரிசுகள் எப்போதும் மறைவதில்லை. அது அவருடைய வாழ்க்கையின் உன்னதமான திருநாள். சாதாரண பேனாவினை பரிசாக பெற்றாலும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

தேர்வு

பள்ளி, கல்லுாரிகளில் மட்டும் நாம் கல்வி பயிலும் போது எழுதுவது மட்டும் தேர்வுகள் அல்ல. இவைகள் நம் வாழ்க்கையின் உயரத்தினை உச்சத்திற்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகள். இந்த படிகளை அமைக்க நாம் அயராது உழைத்தால்தான் உச்சாணிக்கொம்புக்கு செல்லமுடியும். தேர்வு என்பது வாழ்க்கையில் கல்வி கற்கும்போது நடந்தது அதற்கு பின் நம்மை வேலைக்காக தேர்வு செய்வது உட்பட அனைத்தும் அடங்கும்.

நட்பு

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நட்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பள்ளி, கல்லுாரி , பின்னர் பணிக்கால நட்பு, ஓய்வுக்கால நட்பு, என பட்டியல் நீள்கிறது. அனைத்து வகைகளிலும் ஒவ்வொரு மனதிற்கினிய சம்பவங்களும் ஒவ்வொருவர் வாழ்க்கையில் நடப்பதுண்டு. கஷ்டமான காலத்தி்லும் நம்முடன் இருப்பவரின் நட்பு மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு சினிமாக்கள் கூடநட்பின் முக்கியத்துவத்தினை சித்தரித்துள்ளது இதற்கு ஒரு சான்றாகும்.

வெற்றி

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்....அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும் என திரைப்பட பாடல்உண்டு. அந்த அளவிற்கு வெற்றியானது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பிரதான இடத்தினை பெறுகிறது. நாம் திட்டமிட்டு செய்யும் செயல்களில் வெற்றியினை பெற்றுவிட்டால்அதனை விட மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை. அந்த வகையில் நாம் ஜனித்தது முதல் மரணிப்பது வரை இந்த வெற்றியானது நம்முடன் உள்ளது. அந்த கணநேரத்தில் நாம் அடையக்கூடிய சந்தோஷத்திற்கு அளவே இல்லை.,

(இன்னும் வரும்....)

Updated On: 17 July 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு