/* */

vidukathai in tamil with answer-விடுகதை போடுறோம்..உடைக்கிறீங்களா..? வித வித விடுகதை..!

Vidukathai in Tamil With Answer-சொல்கின்ற கதையை விடுவிப்பது விடுகதை. அதாவது புதிராக கூறப்படும் கதையின் விடை. அதுதான் விடுகதை.

HIGHLIGHTS

vidukathai in tamil with answer-விடுகதை போடுறோம்..உடைக்கிறீங்களா..? வித வித விடுகதை..!
X

vidukathai in tamil with answer-விடுகதை (கோப்பு கார்ட்டூன் படம்)

Vidukathai in Tamil With Answer-விடுகதை என்பது ஒரு வேடிக்கை விளையாட்டு. இதன் மூலமாக மொழி அறிவு வளரும். சிந்திக்கும் திறன் பெறலாம். ஒரு விஷயத்தை கிரகிக்கும் மனப்பான்மை ஏற்படும். கற்பனைத்திறன் வளரும். விமர்சிக்கும் திறன் ஏற்படும். இப்படி இந்த விடுகதைக்கு பல நன்மைகள் தரும் வல்லமை உள்ளது. ஆனால் மேம்போக்காகப் பார்த்தால் ஏதோ ஒரு விளையாட்டு என்றுதான் தோன்றும். இது முன்பெல்லாம் மாலை நேரங்களில் அல்லது இரவு நிலவு ஒளியில் அமர்ந்து பெரியவர்கள் வழிகாட்டுதலோடு சிறுவர் சிறுமிகள் விடுகதை போடுவார்கள். ஆனால் இன்று சிறுவர் சிறுமியர் மாலை நேரங்களில் விளையாடுவதையே மறந்து டிவியிலும் செல்போனிலும் மூழ்கிக்கிடக்கின்றனர். இதனால், உடல் ஆரோக்யம் சீர்கெட்டு தேவையில்லாத உடல்பருமன் ஏற்படுகின்றது. இதனால் இளம் தலைமுறைக்கு மனதளவிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்று மாலை நேரங்களில் விளையாடத் தொடங்குகின்றனரோ அன்றுதான் ஆரோக்யம் உறுதி செய்யப்படும். மீசைக்கவி பாரதி ஒன்றும் சும்மா சொல்லி வைக்கவில்லை.

"காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் நல்ல விளையாட்டு -என்றும்

வழக்கப் படுத்திக்கொள் பாப்பா" என்றார் பாரதி. இதனால் உடலும் மனமும் வளம் பெறும். அப்படியான ஒருநிலை வருமா..?

எங்கள் வாசகர்களுக்காக இதோ சில விடுகதைகள் இங்கு தந்துள்ளோம். படிங்க..ரசிங்க..மற்றவர்களுக்கும் சொல்லுங்க.


vidukathai in tamil with answer

  1. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அதிர்ந்தால் ஓடும் கல் . அது என்ன?
    விக்கல்
  2. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டறான். அவன் யார்? கரண்டி
  3. அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? வெங்காயம்
  4. பாலிலே புழு நெளியுது. பயமின்றி உண்ணலாம்..அது என்ன? பாயாசம்
  5. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பவள் அவள் யார்? ஆறு
  6. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
    பஞ்சு
  7. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை
  8. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு
  9. மழையில் பிறந்து வெயிலில் காயுது? காளான்
  10. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? பந்து


  1. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல்
  2. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
    நாற்காலி
  3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்
  4. ஒரு குகைக்குள் 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய் (வாய்,பற்கள்,நாக்கு)
  5. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு
  6. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது – அது என்ன? குயில்
  7. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
    நிலா.
  8. பார்ப்பதற்கு அழகாய் இருப்பாள்,ஆனால் பாம்புக்கு எதிரி அவள் யார்? மயில்
  9. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? கோலம்
  10. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இருக்காது.- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

vidukathai in tamil with answer

  1. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம்
  2. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு
  3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
    அணில்
  4. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை
  5. தாய் கால்நடை உணவாங்கினாள், மகள் சந்தைக்கு போய்விட்டாள். அவை என்ன? வைக்கோல்,நெல்
  6. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? தேங்காய்
  7. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்
  8. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை (அல்லது) பொக்கை
  9. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? மிளகாய்
  10. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர்

  1. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு.. ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன? தேயிலைத் தூள்
  2. பல் துலக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு
  3. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
  4. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
    சீப்பு
  5. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
  6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
  7. நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன? பட்டு
  8. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை
  9. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன? தையல் ஊசி,நூல்
  10. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? நாட்காட்டி

vidukathai in tamil with answer

  1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? மஞ்சள் செடி
  2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம்
  3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு
  4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்? தேன்
  5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
    சிலந்தி
  6. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி
  7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு
  8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு
  9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி
  10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?
    சிலந்தி


  1. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். இவனை மட்டும் குப்பையில் காணமுடியாது அது என்ன? பணம்
  2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.அவர் யார்? கொசு
  3. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசணிக்கொடி
  4. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை
  5. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
    தொலைபேசி
  6. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்
  7. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை
  8. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு
  9. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்
  10. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை

vidukathai in tamil with answer

  1. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
    கண்

  2. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு. படுக்கும்போது அவையில்லை பார். அது என்ன?. ஆமை
  3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை
  4. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அவள் யார் ? அடுப்புக்கரி
  5. உங்களுக்குச் சொந்தமான ஒன்றை, மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்
  6. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
    கண் இமை
  7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு
  8. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது நான் யார்? நாய்
  9. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை
  10. வெளியே உள்ளதை எறிந்து, உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

  1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
    பட்டுத்துணி

  2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
  3. ஓர் அரண்மனைக்குள் முப்பத்திரெண்டு காவலர்கள். அவர்கள் யார்? பற்கள்
  4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை
  5. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்
  6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்
  7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
    உப்பு
  8. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
  9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்
  10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

vidukathai in tamil with answer

  1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்
  2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி
  3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்?
    வெங்காயம்
  4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
  5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது
  6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு
  7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு
  8. கொதிக்கும் கிணற்றில் குதித்து நீந்தி குண்டாகி வருவான். அவன் யார்? பூரி
  9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்
  10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்
Updated On: 20 Oct 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!