/* */

காதலித்துப் பார் அன்பின் வாசம் தெரியும்..! வாழ்க்கையின் சுவாசம் காதலே..!

True Love Tamil-காதலிப்பது என்ன சமூக குற்றமா என்று இளைஞர்கள் சாதாரணமாக கேட்பது வழக்கம். படிக்கும் காலங்களில் காதலில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாது.

HIGHLIGHTS

காதலித்துப் பார் அன்பின் வாசம் தெரியும்..! வாழ்க்கையின் சுவாசம் காதலே..!
X

true love quotes in tamil-உண்மைக்காதல் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

True Love Tamil-காதல் இல்லாத வாழ்க்கை அர்த்தம் இல்லாததாகிவிடும். காதல் மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. காதல் ஒரு மாய சக்தி கொண்டது. இயற்பியலில் மின்தூண்டல் போல உள்ளுக்குள் பெரிய வேதிமாற்றங்களை ஏற்படுத்தும் வேதியியல் கோட்பாடு அது.

பொதுவாக இளைஞர்கள் காதலித்தால் பெற்றோர் விரும்புவதில்லை. ஆனால் ஒரு உண்மை என்ன தெரியுமா..? ஒரு இளைஞக்கு காதல் வருகிறதென்றால் அவன் சரியான வளர்ச்சியில் இருக்கிறான் என்று பொருள். காதல் வராவிட்டால்தான் அவனிடம் கோளாறு உள்ளது. ஆனால், காதலே வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கான வயது வந்தவுடன் காதல் கொள்வதில் தவறில்லை. தவறான பாதைகளுக்குச் செல்லாமல் இருப்பது அவசியம்.

காதல் மென்மையானது. புனிதமானது. காதலை பாடாத கவிஞர் இல்லை. காதலை சொல்லி புரிவதைவிட காதலித்து பார்த்தால் மட்டுமே காதலை உணரமுடியும். ஆகவே, காதல் செய்வீர். காதல் குறித்த மேற்கோள்கள்..உங்களுக்காக இதோ. .:

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை..! அதுதான் காதலோ..?!

நாம் ஒருவருக்காக விட்டுக் கொடுக்கக் காரணம் அடிமை என்ற பொருளில் அல்ல.. நாம் அவர்கள் மீது வைத்துள்ள அன்பு மட்டுமே..!

நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாகத் தான் தோன்றும்..!

சிலருடைய அன்பு கொஞ்ச நாட்கள் தான் என்றாலும், அவர்களின் நினைவுகளை ஆயுள் வரை மறக்க முடியாது..!

உன் அன்பின் தொடக்கம் யாராக இருந்தாலும் உன் அன்பின் முடிவு ஆயுள் வரைக்கும் என்னோடு இருந்தால் அதுவே எனக்கான சொர்க்கம்..!

எந்தச் சூழ்நிலையிலும் நம் அன்பை இழந்து விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு இதயம் செய்யாத தவறுக்கு கூட மன்னிப்புக் கேட்கும்..!

நம்மை நேசிப்பவரிடத்தில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாது..!

நம்மை நேசிப்பவரின் ஆசைகளை பூர்த்தி செய்து அவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான் உண்மையான அன்பு..!

என் கவலைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் உன் அன்பு மட்டுமே..!

நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க வைக்கிறது, உன் மீது நான் கொண்டுள்ள அன்பு..!

இதயத்திற்கு தேவைப்படும் இடைவிடாத துடிப்பை போல் எனக்கும் இடைவிடாது தேவைப்படுகிறது உன் அன்பு..!

வாழ்க்கையில் பெரிதாக எதுவும் தேவை இல்லை. நம்மை புரிந்து கொண்டு வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு இருக்கும் ஒரு உறவு இருந்தால் போதும்..!

நம்மோடு கூட இருக்கும் போதே ஒருவருடைய அன்பை புரிந்துக் கொண்டால் அவர்களை தொலைத்து விட்டு தேடும் நிலை வராது..!

நம்ம Life-ல நிறைய பேர் வந்தாலும் நம் அன்பை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே Lifelong கூட இருப்பாங்க..!

சண்டைக்கும் சமாதானத்துக்கும் இடையே ஒருவரைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் அவர்களை பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது..!

எப்போது ஒருவருடைய அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் அவர்களை உண்மையான நேசிக்க தொடங்குகின்றோம்..!

நம் மனதை புரிந்து கொண்டவர்களைத் தவிர வேறு எவராலும் நம்மை அதிகமாக நேசிக்க முடியாது..!

நம் மனசுக்கு புடிச்சவங்க நம்மள டி போட்டு கூப்பிட்டா ரொம்ப Happy யா இருக்கும்ல..?!

நீரில் இருந்தாலும் நெருப்பில் இருந்தாலும் தங்கத்தின் மதிப்பு மாறாது. அது போலத்தான் நீ அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் என் மனம் என்றும் மாறாது..!

உன் மடியில் தலை சாய்ந்திருக்கும் இந்த நொடி போதும் பெண்ணே..! இந்நொடி என் உயிர் போனாலும் சந்தோஷம் நாளை என்ற கனவு களைந்து போகட்டும்..!

உயிர்மெய் எழுத்துக்களால் எழுதி இருக்கும் என் கவிதைகள் உனக்கானது மட்டும் இல்லை. அதில் கலந்து இருக்கும் என் உயிரும் உனக்கானது தான்..!

நீ விரும்பினால் உன் வாழ்வின் இறுதிவரை உனக்கு துணையாக வர எனக்கு சம்மதம். தேவைப்பட்டால் என் உயிரையும் உனக்கு கொடுப்பேன்..!

உலகமே நினைத்தாலும் உண்மையான அன்பை தர இயலாது. ஆனால் ஒரு உண்மையான அன்பு நினைத்தால் ஒரு உலகத்தையே தரலாம்..!

துடிப்பது என் இதயம். துடிக்க வைப்பது உன் நினைவுகள். என்னுள் கலந்த உன்னை என் உயிர் பிரிந்தாலும் பிரிக்க முடியாது அன்பே..!

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்குமே தெரியாது.!

என்னை பார்க்கும் போதெல்லாம் பொய் கோபம் கொள்கிறாய். எனக்குத் தெரியும் அது கோபம் இல்லை

வெட்கம் என்று..! உன்னைத் தவிர, வேறு யார் என்னிடம் வெட்கம் கொள்வது..?

காதலை தேடி நீ ஓடாதே, தோற்றுப் போவாய் வாழ்க்கையில்..! அதுவே வாழ்க்கையைத் தேடி ஓடிப்பார் வென்றுவிடுவாய் உன் காதலையும் சேர்த்தே...!

எப்போதாவது நினைத்து பார்ப்பாயா என்னை என்று எனக்குத் தெரியவில்லை..! எப்போதுமே நினைத்தபடியே இருக்கிறேன் நான் உன்னை..!

காலம் எல்லாம் உன்னை பார்த்தே வாழ வேண்டும். உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்து சாக வேண்டும்..!

உன் மூச்சு தொடும் தூரத்தில் நான் இருக்க வேண்டும். அந்த மூச்சை சுவாசித்து நான் உயிர் வாழ வேண்டும் என் கண்மணியே..!

பெண்ணே, உன்னை காணும் வரை வாழ்க்கை எனக்குப் பிடித்தது. ஆனால், உன்னைக் கண்ட பின்பு தான் வாழவே பிடித்தது..!

அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட, பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை...!

நூறு பெண்களிடம் காதலை சொல்வது,காதல் இல்லை..! நூறு முறையும் ஒரே பெண்ணிடம் சொல்வது தான் உண்மையான காதல்..!

விரும்பியபோது விரும்பினேன் என்பதை விட, நீ வெறுத்த போதும் உன்னை விரும்பினேன் என்பதே எனது உண்மையான அன்புக்குச் சான்று..!

அழகைப் பார்த்து வருவது காதல் இல்லை..! ஒரு பெண்ணை அழுகை வராமல் பார்த்துக் கொள்வதுதான் உண்மையான காதல்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 April 2024 5:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...