/* */

கணவன் மனைவி உண்மையான அன்பு குறித்த வாசங்களை படியுங்களேன்...

True Love Husband Wife Quotes in Tamil- கல்யாணமாலை.... அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலும் பேரின்பமே... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..ங்க..

HIGHLIGHTS

கணவன் மனைவி உண்மையான அன்பு  குறித்த வாசங்களை படியுங்களேன்...
X



True Love Husband Wife Quotes in Tamil-கணவன் மனைவி இருவரும் புரிந்துகொண்டால் எல்லாம் சுகமே..சுகமே...விட்டுக்கொடுத்து போவதால் கெட்டு போவதுமில்லை .. என்ற நினைப்பு இருவருக்கும்இருக்குமானால் எப்போதும் பிரச்னைகளே வராது...

அக்கால தம்பதியினர் அன்பு போல் இக்கால தம்பதியினர் அன்பு வருமா? என பலர் கேட்பது காதில் விழுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவருக்கு அவ்வளவு மரியாதையை கொடுத்தனர். கணவன் பெயரைக்கேட்டால் கூட சொல்லமாட்டார்கள். அருகில் உள்ளவர்கள்தான் அவருடைய கணவன் பெயரை தெரிவிப்பார். அதேபோல் கணவனுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்துவந்தனர். செய்து தந்தனர்.

true love husband wife quotes in tamilமுண்டாசுக் கவி கண்ட புதுமைப்பெண் கனவு பலித்தது. அதன் பிறகு பெண்கள் வீட்டில் அடைந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்தனர். அதன் பிறகு அவர்களுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எல்லாம் துாளாயிற்று . அப்புறம் கேபிள் டிவி வந்தது. உள்ளதும் போச்சு என்று சொல்வது போல் அனைத்தும் போய்விட்டது. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்றளவில் கூட கணவன் இறந்த உடனே அதிர்ச்சியில் மனைவி இறப்பதும், மனைவி இறந்த பின் கணவன் இறப்பதும் தொடர்கிறது. அவ்வளவு அந்நியோன்யமான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இதுதான் சான்று. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் கணவன் வீட்டிற்கு வந்தபின்னர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளிக்காட்டாமல் வாழ்ந்தனர். ஆனால் இப்போது அடுத்த நிமிஷமே தகவல் வந்துவிடுவதால் நீ உடனே கிளம்பி வந்துடு ... என்ற ஒற்றைச் சொல்லுக்காக காத்திருந்தது போல் அடுத்த நிமிடம் பிறந்த வீட்டிற்கு வந்துவிடுகின்றனர். சகிப்புத்தன்மை கொஞ்சம் கூட இல்லாமல் வளர்ப்பதால்தான் இந்த விபரீதங்கள்... கஷ்டம் இல்லாமல் வளர்த்ததால் அவர்களுக்கு கஷ்டம் என்பது எட்டிக்காயாக கசக்கிறது. என்ன செய்ய... சரி அதை விடுங்க..

அன்பாய் வாழும் கணவன் மனைவியர் பரிமாறிக்கொள்ளும் அன்பு வாசகங்கள் இதோ....

அன்போ அரவனைப்போ ஆறுதலோ, யாவும் உன்னிடம்இருந்தே எதிர்பார்க்கிறேன்...

காதல்... மணவறையில் தொடங்குவதில்லை... மன அறையில் துவங்குகிறது

நம் அன்பை முழுமையாக புரிந்துகொண்ட ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு பிரிந்து செல்ல முடியாது.

வாழ்க்கையில் வரும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் உன்னோடு கூட அனுபவிக்க விரும்புகிறேன்.

எனக்கான சிறிய உலகத்தில் நான் அமைத்துக்கொண்ட மிகப்பெரிய உறவு நீ

நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ இப்போது வரமாக கேட்கிறேன் உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று



true love husband wife quotes in tamil

கணவன் மனைவி காதல் என்பது கட்டிப்பிடித்தளிலும், முத்தமிடுதளிலும், கட்டிலிடுவதிலும் இல்லை.. தன்னோடு வாழ்பவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வதில் தான் இருக்கிறது.

உணர்ச்சிகளால் ஆள்வதை விட உணர்வுகளால் ஆள்ந்து பார்... உன் துணைவியை விட ஓர் உயர்ந்த உயிர் தோழியை வாழ்வில் நீ காண மாட்டாய்!!

ஒரு மகாராணியை மனைவியாக்குவது தான் சிரமம். ஒரு மனைவியை மகாராணியாக்குவது சுலபம்!!

ஒரு பெண்ணுக்கு குழந்தையைக் கொடுப்பது மட்டுமே ஆண்மையில்லை.. இறுதிவரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்துக்கொள்வதே உண்மையான ஆண்மை.!!!

வாழ்க்கை துணை மேல் இருவதில் வந்த காதல், அருவதிலும் மாறாமல் இருப்பது தான் சிறந்த மண வாழ்க்கைக்கான இரகசியம்..!!

ஒரு ஆணின் வலிமைக்கான ஒரு உறுதியான அறிகுறி, அவன் தன் மனைவியை எவ்வளவு மென்மையாக நேசிக்கிறான் என்பதுதான்!!

ஒரு கணவன் தன் மனைவிக்குக் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு, அவனது நேரம், அவனுடைய கவனம் மற்றும் அவனுடைய அன்பு.

உறவுகள் என சொல்லிக்கொள்ள ஆயிரம் பேர் இருந்தாலும், என் உணர்வுகளை புரிந்துகொள்ள நீ மட்டுமே இன்று...

முகம் பார்த்து வந்த அன்பு முறிந்துவிடும். பணம் பார்த்து வந்த அன்பு பாதியில் போய்விடும்.. உள்ளம் பார்த்து வந்த அன்பு மட்டுமே கடைசி நொடி வரை நிலைத்திருக்கும்.


மனைவியை தன் தாயாக நினைத்துக்கொள்ளும் ஆண்களும், தன் கணவனை பிள்ளையாக நினைத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கும்வரை, உண்மையான காதலுக்கு என்றும் மரணமில்லை..

மனைவி வாழும் இரண்டாவது கருவறை தான் கணவன் இதயம்..

கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பு சொல்லப்படுவது அல்ல, காட்டப்படுவது.

கடல் அலைகள் நம் பாதம் நனைக்க, உன் கரம் கோர்த்து நடந்து செல்ல வேண்டும்.. கற்கரையில் மட்டும் அல்ல.. வாழ்நாள் முழுவதும்..

நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ்வதற்க்கு மட்டுமல்ல.. உனக்காக வாழ்வதற்கு...

ஒரு பெண் தன்னை மறந்து தன் குழந்தைத்தனத்தை ஒரு ஆணிடம் வெளிப்படுத்துகிறாள் என்றால், அங்கு அவள் தாயின் பாசத்தை உணர்கிறாள்..

இதயம் இருப்பது என்னவோ எனக்குள் தான்.. ஆனால் அது துடிப்பது எப்பொழுதும் உனக்காக மட்டும் தான்..!!

அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல... பிரியக்கூடாது என்பதற்கு..

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும். மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அதிலும் நீயே வேண்டும்... உறவாக மட்டுமல்ல.. என் உயிராக!!

ஒரு நொடியே வாழ்வேன் எனில் உன் மார்போடு அணைத்திடு.. உன் இதயத்துடிப்பின் இசை கேட்டே என் என் இதயம் உறங்கிடட்டும்...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...