/* */

தமிழில் விடுகதைகள் விடைகளுடன்..! குழந்தைகளுக்கு ஜாலி..ஜாலி..!

Tamil Puzzles With Answers-குழந்தைகளுக்கு சொல்லித்தரும் அழகான விடுகதைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

Tamil Puzzles With Answers
X

Tamil Puzzles With Answers

Tamil Puzzles With Answers-தமிழின் சொல் அழகுக்கு விடுகதைகள் ஒரு எடுத்துக்காட்டு. சொற்களுக்குள் மறைந்திருக்கும் புதிரை விடுவிப்பது விடுகதை.

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள் 2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி 3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம் 4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு 5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது 6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு 7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு 8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி 9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம் 10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்

தொடரும் விடுகதைகள் – 1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி 2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு 3. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள் 4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை 5. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன் 6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர் 7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு 8. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல் 9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல் 10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

தொடரும் விடுகதைகள் – 1. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண் 2. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?. ஆமை 3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை 4. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி 5. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர் 6. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? கண் இமை 7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு 8. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய் 9. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை 10. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

தொடரும் விடுகதைகள் – 1. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம் 2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. கொசு 3. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசணிக்கொடி 4. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை 5. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி 6. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய் 7. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை 8. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு 9. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய் 10. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை

தொடரும் விடுகதைகள் – 1. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? மஞ்சள் செடி. 2. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம் 3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு 4. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? தேன் 5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? சிலந்தி 6. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி 7. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு 8. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு 9. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி 10. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? சிலந்தி

தொடரும் விடுகதைகள் – 1. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன? தேயிலை 2. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு 3. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு 4. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு 5. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை 6. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ 7. நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன? பட்டு 8. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை 9. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன? தையல் ஊசியும் நூலும் 10. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? நாட்காட்டி

தொடரும் விடுகதைகள் – 1. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்? மின்சாரம் 2. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன? செருப்பு 3. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்? அணில் 4. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை 5. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? நெல் 6. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? தேங்காய் 7. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர் 8. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை 9. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? மிளகாய் 10. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? தண்ணீர்

தொடரும் விடுகதைகள் – 1. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன? நிழல் 2. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? நாற்காலி 3. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம் 4. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? வாய் 5. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு 6. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? குயில் 7. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? நிலா 8. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? மயில் 9. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? கோலம் 10. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

தொடரும் விடுகதைகள் –1. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? விக்கல் 2. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான். கரன்டி 3. அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? வெங்காயம் 4. பாலிலே புழு நெளியுது. அது என்ன? பாயாசம் 5. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்? ஆறு 6. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? பஞ்சு 7. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? தென்னை 8. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? கொசு 9. மழையில் பிறந்து வெயிலில் காயுது? காளான் 10. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? பந்து

தொடரும் விடுகதைகள் – 1. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன? நாணயம் 2. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? கண் 3. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன? வேர்கடலை 4. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? வத்தல் மிளகாய் 5. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்? கடிகாரம் 6. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது? சீப்பு 7. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? தென்னை 8. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்? அருவி 9. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ? சுண்ணாம்பு 10. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்

தொடரும் விடுகதைகள் – 1. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? பென்சில் 2. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? மின் விசிறி 3. வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? உழுந்து 4. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? நாக்கு 5. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ? தேங்காய் 6. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? வானொலி பெட்டி 7. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? சோளக்கருது 8. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? பாம்பு 9. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? அஞ்சல் பெட்டி. 10. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன? சூரிய காந்தி

தொடரும் விடுகதைகள் – 1. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? கிளி 2. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? நிலா 3. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் 4. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? அம்மி குளவி 5. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன? மூக்கு 6. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ? சந்திரன் 7. உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன? அன்னாசிப் பழம் 8. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன? நாக்கு. 9. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுவத்தி 10. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன? நாய்

தொடரும் விடுகதைகள் – 1. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? மழை 2. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? ரயில் 3. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன? முடி 4. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? விறகு 5. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம் 6. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்? நெருப்பு 7. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது? செருப்பு 8. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான். செருப்பு 9. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன? மேகம், மழை. 10. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன? அம்பு.

தொடரும் விடுகதைகள் –1. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ? இதயம் 2. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? ஒட்டகம் 3. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? தேங்காய் 4. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள் 5. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை? ஆபத்து 6. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? மஞ்சள் 7. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? தலை முடி 8. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? பணியாரம் 9. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில் 10. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன? வெண்டைக்காய்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?